News September 30, 2025
கரூரில் டாக்டர் அனுமதியின்றி 7 பேர் டிஸ்சார்ஜ்

கரூரில் விஜய்யின் பரப்புரையில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், சிகிச்சையிலிருந்த 7 பேர் டாக்டர் அனுமதியின்றி ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதாக கரூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 110 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 51 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 13 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், 2 பேர் உயர் சிகிச்சைக்காக மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
Similar News
News September 30, 2025
பா.ரஞ்சித் படத்தில் பொன்னியின் செல்வன் நடிகை

பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படத்தில் நடிகை ஷோபிதா துலிபலா இணைந்துள்ளார். ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவருக்கு, இப்படத்தில் சிறப்பான ரோல் உள்ளதாக ரஞ்சித் கூறியுள்ளார். இப்படத்தில் அட்டகத்தி தினேஷ் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து வருகின்றனர். இதன் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News September 30, 2025
சஹாலை 2-வது மாதத்திலே கண்டுபிடித்தேன்: EX மனைவி

சஹால் ஏமாற்றியதை திருமணம் ஆன 2-வது மாதத்திலேயே கண்டுபிடித்ததாக அவரது முன்னாள் மனைவி தனஸ்ரீ தெரிவித்துள்ளார். ஜீவனாம்சமாக ₹60 கோடி கேட்டதாக வெளியான தகவல் தவறானது எனவும், செய்திகளில் வெளியான பொய்யான தகவல்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இருவரும் மனமுவந்து கேட்டதால் தான் விவாகரத்து விரைவில் கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
News September 30, 2025
கரூர் துயரத்தில் 4 பக்கமும் தவறு: ப.சிதம்பரம்

கரூர் துயர சம்பவத்தில் 4 பக்கமும் தவறு இருப்பதாக தோன்றுகிறது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு தோன்றிய ஒரு யோசனையை தலைமை செயலாளரிடம் கூறியதாகவும், இதுபோன்று பலர் தெரிவித்த யோசனைகளை பரிசீலித்து எடுக்கப்படும் முடிவுகளை அனைத்து அரசியல் கட்சிகளும் பின்பற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.