News May 24, 2024
7 நக்சல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கரின் எல்லையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நாராயண்பூரில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 7 நக்சல்கள் உயிரிழந்தனர். படுகொலை செய்யப்பட்ட மாவோயிஸ்ட்களின் அருகில் கிடந்த ஏகே-47 ரக துப்பாக்கிகள், நவீன ஆயுதங்களும் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டன.
Similar News
News August 16, 2025
10 விநாடி விளம்பரத்திற்கு ₹16 லட்சம்

2025 ஆசிய கோப்பை தொடர் வரும் செப்., 9-ம் தேதி தொடங்கவுள்ளது. இத்தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகளின்போது வரும் விளம்பரங்களுக்கு அதிக டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக IND vs PAK மோதும் போட்டிகளின்போது, 10 விநாடி விளம்பரங்களுக்கு ₹14 முதல் ₹16 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிவி, டிஜிட்டல் என இந்த தொடரின் முழு ஒளிபரப்பு உரிமமும் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் வசம் உள்ளது.
News August 16, 2025
போர்களின்போது பாலியல் துன்புறுத்தல்கள் 25% அதிகரிப்பு

மனிதம் கொஞ்சம் கொஞ்சமாக செத்து வருவதற்கு இந்த அறிக்கையே சாட்சி. கடந்த ஆண்டில் நடைபெற்ற போர்கள் & உள்நாட்டு மோதல்களின்போது சிறுமிகள், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் 25% அதிகரித்துள்ளதாக ஐ.நா., தெரிவித்துள்ளது. இதில் 63 அரசு & NGO அமைப்புகளுக்கு தொடர்புள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொடுமைகள் காங்கோ, சோமாலியா, தெற்கு சூடான், ஆப்பிரிக்க குடியரசு ஆகிய நாடுகளில் அரங்கேறியுள்ளன.
News August 16, 2025
BREAKING: ஆக.19-ல் NDA கூட்டணி MP-க்கள் கூட்டம்

PM மோடி தலைமையில் NDA கூட்டணி MP-க்கள் கூட்டம் ஆக.19-ல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்திற்கு அதிமுகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு அன்றைய தினமே வேட்பாளர் அறிவிப்பு இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.