News April 7, 2025
19 வயது நபரின் நுரையீரலில் 7 ஆணிகள்!

மகாராஷ்டிராவில் இளைஞரின் நுரையீரலில் சிக்கியிருந்த 7 ஆணிகளை 3 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு டாக்டர்கள் அகற்றியுள்ளனர். தூங்கும்போது தவறுதலாக ஆணிகளை விழுங்கியதாக கூறி அந்த 19 வயது இளைஞர் மும்பையில் உள்ள பிம்பிரி ஹாஸ்பிடலில் அட்மிட்டாகியுள்ளார். இதனைக் கேட்டு முதலில் ஷாக்கான டாக்டர்கள் பின்னர் தங்களது டூட்டியை செய்து அவரது உயிரை காப்பாற்றியுள்ளனர். தூங்கும் போது கூட ஜாக்கிரதையா இருங்க மக்களே!
Similar News
News September 14, 2025
மகளிர் உரிமைத் தொகை: CM ஸ்டாலின் கொடுத்த அப்டேட்

மகளிர் உரிமைத் தொகை குறித்து அதிகாரிகளுக்கு CM ஸ்டாலின் முக்கியமான உத்தரவு பிறப்பித்துள்ளார். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி தலைமை செயலகத்தில் CM ஆய்வு மேற்கொண்டார். அப்போது மகளிர் உரிமைத் தொகை தொடர்பான கள ஆய்வுகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். எனவே, உங்களுடன் ஸ்டாலின் முகாமில் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் நற்செய்தி கிடைக்க போகிறது.
News September 14, 2025
உடல் வலி நீங்க காலையில் இந்த யோகா பண்ணுங்க!

அர்த்த பெகாசனம் செய்வதால், உடல் வலி நீங்கி, தசைகள் வலுபெறும்.
➮தரையில் குப்புற படுத்து, கைகளை தரையில் ஊன்றவும்.
➮கைகளில் அழுத்தம் கொடுத்து, மார்பை- தலையை உயர்த்தவும்.
➮வலது முழங்காலை மடித்து, இடுப்பிற்கு அருகில் கொண்டு வரவும்.
➮வலது கையை கொண்டு, வலது முழங்காலை பிடித்து, மூச்சை மெதுவாக இழுத்து வெளியே விடவும். ➮இந்தநிலையில், 15- 20 விநாடிகள் வரை இருந்துவிட்டு, காலை மாற்றி செய்யவும். SHARE IT.
News September 14, 2025
மணிப்பூர் இரண்டாக பிரிகிறதா?

மணிப்பூரை பிரித்து குக்கி இன மக்களுக்கு சட்டப்பேரவையுடன் கூடிய தனி யூனியன் பிரதேசத்தை உருவாக்க கோரி, PM மோடியிடம் 7 BJP MLA-க்கள் உட்பட 10 MLA-க்கள் குழு மனு அளித்துள்ளனர். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இன துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ள தாங்கள், மீண்டும் ஒருபோதும் அவர்களோடு ஒரே கூரையின் கீழ் வாழ முடியாது என்றும் வேதனை தெரிவித்துள்ளனர். விரைவில் நற்செய்தி வரும் என PM மோடி உறுதியளித்துள்ளார்.