News April 7, 2025
19 வயது நபரின் நுரையீரலில் 7 ஆணிகள்!

மகாராஷ்டிராவில் இளைஞரின் நுரையீரலில் சிக்கியிருந்த 7 ஆணிகளை 3 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு டாக்டர்கள் அகற்றியுள்ளனர். தூங்கும்போது தவறுதலாக ஆணிகளை விழுங்கியதாக கூறி அந்த 19 வயது இளைஞர் மும்பையில் உள்ள பிம்பிரி ஹாஸ்பிடலில் அட்மிட்டாகியுள்ளார். இதனைக் கேட்டு முதலில் ஷாக்கான டாக்டர்கள் பின்னர் தங்களது டூட்டியை செய்து அவரது உயிரை காப்பாற்றியுள்ளனர். தூங்கும் போது கூட ஜாக்கிரதையா இருங்க மக்களே!
Similar News
News January 9, 2026
BREAKING: சென்சார் போர்டுக்கு ஸ்டாலின் கண்டனம்

CM ஸ்டாலின் மறைமுகமாக விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது. சென்சார் வழங்கப்படாததால் ‘ஜனநாயகன்’ வெளியாகவில்லை. அதேபோல், ‘பராசக்தி’ படத்தில் தீ பரவட்டும், ஹிந்தி திணிப்பு உள்ளிட்ட முக்கிய வசனங்களுக்கு கட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், CBI, ED, IT வரிசையில் சென்சார் போர்டும் மத்திய பாஜக அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளதாக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
News January 9, 2026
எங்க டீமே ரொம்ப சந்தோஷமா இருக்காங்க: சசிகுமார்

ஆஸ்கர் விருதுக்கான பொது நுழைவு பட்டியலுக்கு தகுதியான 201 படங்களில் <<18807301>>’டூரிஸ்ட் பேமிலி’<<>> இடம்பெற்றுள்ளது. இதுபற்றி பேட்டியளித்த சசிகுமார், படக்குழு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். 18 வயது பையனுக்கு அப்பாவாக நடிப்பதா என நினைத்திருந்தால், இப்படியொரு படம் கிடைத்திருக்காது எனவும் அவர் கூறியுள்ளார். படத்தை வெற்றிபெற வைத்த மக்களுக்கும், கொண்டாடிய அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
News January 9, 2026
‘மகன் மீண்டும் வருகிறான்’ 62 வயதில் கர்ப்பமான பெண்!

சீனாவின் ஜிலின் மாகாணத்தை சேர்ந்த 62 வயது பெண் ஒருவர், தனது ஒரே மகனை இழந்த சோகத்தில் இருந்து மீள IVF முறையில் மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். வயிற்றில் வளரும் குழந்தை, தனது மகனின் மறுபிறவி என்று நம்பும் அவரின் வீடியோக்கள் SM-ல் விவாதத்தை கிளப்பியுள்ளன. பாசம் ஒரு பக்கம் இருந்தாலும், இந்த வயதில் இது தேவையா என்றும், ஆரோக்கியம் முக்கியமல்லவா எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


