News April 7, 2025
19 வயது நபரின் நுரையீரலில் 7 ஆணிகள்!

மகாராஷ்டிராவில் இளைஞரின் நுரையீரலில் சிக்கியிருந்த 7 ஆணிகளை 3 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு டாக்டர்கள் அகற்றியுள்ளனர். தூங்கும்போது தவறுதலாக ஆணிகளை விழுங்கியதாக கூறி அந்த 19 வயது இளைஞர் மும்பையில் உள்ள பிம்பிரி ஹாஸ்பிடலில் அட்மிட்டாகியுள்ளார். இதனைக் கேட்டு முதலில் ஷாக்கான டாக்டர்கள் பின்னர் தங்களது டூட்டியை செய்து அவரது உயிரை காப்பாற்றியுள்ளனர். தூங்கும் போது கூட ஜாக்கிரதையா இருங்க மக்களே!
Similar News
News December 5, 2025
BREAKING: மன்னிப்பு கேட்டார் நடிகர் சூரி

ரசிகரிடம் மன்னிப்பு கேட்டு நடிகர் சூரி உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். சூரியின் ஷூட்டிங்கில் பவுன்சர்கள் கடுமையாக நடந்து கொள்வதாக, X தளத்தில் அவரை டேக் செய்து ரசிகர் ஒருவர் வருத்தம் தெரிவித்திருந்தார். அதற்கு, ஷூட்டிங்கில் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக சூரி குறிப்பிட்டுள்ளார். இனி கவனமுடன் இருக்க சொல்கிறோம், எப்போதும் போல உங்கள் அன்பே எங்களுக்கு பலம் என சூரி குறிப்பிட்டுள்ளார்.
News December 5, 2025
தலைவர்கள் பின்னால் இருக்கும் செடியின் சிறப்பு தெரியுமா?

PM மோடி – புடின் பேச்சுவார்த்தையின் போது, அவர்களுக்கு பின்னால் இருந்த செடி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. HELICONIA எனப்படும் இந்த செடி செழிப்பு, வளர்ச்சி, புது தொடக்கம், நல்லிணக்கத்தின் குறியீடாக உள்ளது. இதுபோன்ற முக்கிய தலைவர்களின் சந்திப்பின் போது, அங்கு எந்த ஒரு பொருளும் எதேச்சையாக இடம்பெறாது. எனவே ரஷ்யா – இந்தியா இடையிலான உறவு முன்னேற்றப் பாதையில் செல்வதை உலகிற்கு இது உணர்த்தியுள்ளது.
News December 5, 2025
நீதித்துறையின் செயல் வெட்கக்கேடானது: சீமான்

மதுரையை இன்னொரு அயோத்தியாக மாற்றும் சூழ்ச்சிக்கு நீதித்துறையே துணை நிற்பது வெட்கக்கேடானது என சீமான் விமர்சித்துள்ளார். வாக்கு வேட்டைக்காக சமூக அமைதியை கெடுக்க முயல்வதுதான் உங்களது (பாஜக, இந்து அமைப்புகள்) ஆன்மீகப்பற்றா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மதவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க தமிழர் எனும் இனஉணர்வோடு ஓர்மைப்படுவோம் என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.


