News April 7, 2025
19 வயது நபரின் நுரையீரலில் 7 ஆணிகள்!

மகாராஷ்டிராவில் இளைஞரின் நுரையீரலில் சிக்கியிருந்த 7 ஆணிகளை 3 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு டாக்டர்கள் அகற்றியுள்ளனர். தூங்கும்போது தவறுதலாக ஆணிகளை விழுங்கியதாக கூறி அந்த 19 வயது இளைஞர் மும்பையில் உள்ள பிம்பிரி ஹாஸ்பிடலில் அட்மிட்டாகியுள்ளார். இதனைக் கேட்டு முதலில் ஷாக்கான டாக்டர்கள் பின்னர் தங்களது டூட்டியை செய்து அவரது உயிரை காப்பாற்றியுள்ளனர். தூங்கும் போது கூட ஜாக்கிரதையா இருங்க மக்களே!
Similar News
News April 10, 2025
நீதிபதி மகனை தாக்கிய வழக்கு: தர்ஷனுக்கு ஜாமின்

நீதிபதி மகனைத் தாக்கிய வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. பிக்பாஸ் படத்தின் மூலம் பலருக்கும் அறிமுகமான தர்ஷன், ‘கூகுள் குட்டப்பா’ என்ற படத்திலும் நடித்துள்ளார். கார் நிறுத்துவது தொடர்பாக தர்ஷனுக்கு நீதிபதி மகன் ஒருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் தர்ஷன் தன்னை தாக்கியதாக அவர் புகார் கொடுத்தார். தொடர்ந்து தர்ஷனை காவல்துறை கைது செய்தது.
News April 10, 2025
அம்பயருடன் சண்டை.. பாராக்கின் தரமான சம்பவம்

GT-க்கு எதிரான ஆட்டத்தில் RR வீரர் ரியான் பராக்கிற்கு அம்பயர்கள் கொடுத்த அவுட் சர்ச்சையானது. 7-ஆவது ஓவரில் பராக் அடித்த பந்தை விக்கெட் கீப்பர் பிடிக்க அம்பயர் அவுட் கொடுத்தார். ஆனால் பந்து பேட்டில் படவில்லை என பராக் ரிவியூவ் கேட்டார். 3-ஆவது நடுவர் பார்த்தபோது பந்து பேட்டை உரசுவதுபோல் ஸ்னிக்கோ மீட்டரில் காட்டியதால் அவரும் அவுட் கொடுத்தார். கடுப்பான பராக் அம்பயருடன் சண்டைக்கு சென்றுவிட்டார்.
News April 10, 2025
அன்னை தெரேசாவின் பொன்மொழிகள்

*மிகுந்த அன்புடன் செய்யப்படும் சிறிய காரியங்கள் இந்த உலகை மாற்றும். *நீங்கள் இந்த உலகை மாற்ற விரும்பினால், வீட்டிற்குச் சென்று உங்கள் குடும்பத்தை நேசியுங்கள். *சிலர் உங்கள் வாழ்க்கையில் ஆசீர்வாதங்களாக வருகிறார்கள்; சிலர் உங்கள் வாழ்க்கையில் பாடங்களாக வருகிறார்கள். *நேற்று என்பது கடந்துவிட்டது; நாளை என்பது இன்னும் வரவில்லை; எங்களுக்கு இன்று மட்டுமே உள்ளது. *அமைதி ஒரு புன்னகையில் தொடங்குகிறது.