News June 8, 2024
மோடி பதவியேற்புக்கு 7 நாடு தலைவர்கள் பங்கேற்கின்றனர்

பிரதமராக 3ஆவது முறையாக நாளை இரவு 7.15 மணிக்கு மோடி பதவியேற்கவுள்ளார். இந்த விழாவில் வங்கதேசம், பூடான், நேபாளம், இலங்கை, மாலத்தீவு, மொரிசீயஸ், செசல்ஸ் ஆகிய நாட்டு தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். 2014 பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் கலந்து கொண்ட நிலையில், இம்முறை அந்நாட்டு பிரதமருக்கும், மியான்மர், ஆப்கானிஸ்தான் நாடுகளின் தலைவர்களுக்கும் இந்தியா அழைப்பு விடுக்கப்படவில்லை.
Similar News
News August 9, 2025
அந்த ஹீரோ டார்ச்சர் செய்தார்.. தமன்னா பகீர் புகார்

ஷூட்டிங்கில் தென்னிந்திய ஹீரோ ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக தமன்னா குற்றஞ்சாட்டியுள்ளார். ஆரம்ப காலத்தில் நடித்த படத்தின் ஹீரோ, தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இப்படி செய்யாதீர்கள் என கெஞ்சியும் அந்த ஹீரோ கேட்கவில்லை என்றும் தமன்னா தெரிவித்துள்ளார். நடிகர் சங்கத்தில் புகார் அளிப்பதாக கூறிய பிறகே அவர் விலகியதாகவும் கூறியுள்ளார். எந்த ஹீரோவாக இருக்கும்?
News August 9, 2025
தூங்கி பல நாள்கள் ஆகிவிட்டது: அன்புமணி

பதவி, பொறுப்புக்கான அவசியமே தனக்கு கிடையாது என அன்புமணி தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், தான் தூங்கி பல நாள்கள் ஆகிவிட்டதாகவும், மனதில் பாரத்தை சுமந்து வருவதாகவும் தெரிவித்தார். தான் சுயநலவாதி கிடையாது, ஆனால் ராமதாஸை சுற்றியுள்ள குள்ளநரி கூட்டம் ஒருதலைபட்சமாக தான் சொல்லாததை எல்லாம் சொன்னதாக அவரிடம் கூறுவதாகவும் வேதனை தெரிவித்தார்.
News August 9, 2025
பாமக மெகா கூட்டணி அமைக்கும்: அன்புமணி

பாமக தொண்டர்கள் விருப்பப்படி மெகா கூட்டணி அமைக்கப்படும் என அன்புமணி தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் நடைபெறும் பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், பாமகவுக்கு வழிகாட்டி என்றால் ராமதாஸ் தான் என்றும், அவர் இங்கு இல்லை என்றாலும், அவரது உள்ளம் இங்கு தான் உள்ளதாகவும் கூறினார். வன்னியர்கள் அனைவரும் பாமகவுக்கு வாக்களித்தால் 40 – 50 MLA-க்களை பெற்று ஆட்சியமைக்கும் நிலை ஏற்படும் என தெரிவித்தார்.