News August 2, 2024

7.28 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல்

image

இந்தியாவில் 7.28 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 7.5% அதிகமாகும். சுமார் 5.27 கோடி பேர் புதிய வருமான வரி விகித முறையிலும், 2.01 கோடி பேர் பழைய வருமான வரி முறையிலும் ஐடி தாக்கல் செய்துள்ளனர். மொத்தமாக 72% பேர் புதிய வருமான வரி விகித முறைக்கு மாறியுள்ளனர். 58.57 லட்சம் பேர் முதல்முறையாக ஐடி தாக்கல் செய்துள்ளனர்.

Similar News

News November 15, 2025

திங்கள்கிழமை இந்த மாவட்டங்களில் விடுமுறையா?

image

நாளை, நாளை மறுநாள் (திங்கள்) கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரத்தில் கனமழையும், சென்னையில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. நவ.18-ல் காவிரி படுகை மாவட்டங்களில் கனமழையும், சென்னையில் மிக கனமழையும் தொடரும் எனவும் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், திங்கள்கிழமை அலர்ட் கொடுக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News November 15, 2025

இன்னும் சற்று நேரத்தில் ராகுல் காந்தி ஆலோசனை

image

பிஹார் தேர்தலில் 61 இடங்களில் போட்டியிட்ட காங்., 6 இடங்களில் மட்டுமே வென்றது. தேசிய கட்சியான காங்.,கிற்கு இது பெரும் பின்னடைவாக அமைந்தது. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் தொடர்பாக, கட்சியின் மூத்த தலைவர்களுடன், மதியம் 12:00 மணிக்கு ராகுல் காந்தி ஆலோசனை நடத்தவுள்ளார். தொடர் தோல்விகள் தொடர்பாகவும், கட்சியின் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது.

News November 15, 2025

கஞ்சா கேள்வி: ‘இட்லி, தோசை’ என நயினார் பதில்!

image

தமிழகத்தில் கிராமங்களிலும் கஞ்சா பயன்பாடு அதிகரித்து வருவதாக நயினார் நாகேந்திரன் பேட்டியளித்தார். அப்போது இடைமறித்த செய்தியாளர், ‘குஜராத்தில் அதிக கஞ்சா பிடிபட்டுள்ளதே?’ என கேட்க, சற்று பின்வாங்கிய நயினார், ‘முதலில் இட்லி, தோசை சாப்பிடுங்கள், அப்புறம் சப்பாத்தி சாப்பிடுங்கள்’ என்றார். அதாவது, முதலில் தமிழகத்தை கவனியுங்கள், பிறகு குஜராத்தை பற்றி பேசலாம் எனக்கூறி, சந்திப்பை முடித்து கொண்டார்.

error: Content is protected !!