News August 20, 2025
7 மாதத்தில் 101 பேர் குண்டாசில் கைது; எஸ்பி தகவல்

திருநெல்வேலி மாவட்டத்தில், சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணிக்காக்கும் நடவடிக்கையாக, நடப்பாண்டில் இதுவரை 101 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய 69 பேர், பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 21 பேர் மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 12 பேர் அடங்குவர். இந்த தகவலை மாவட்ட எஸ்.பி சிலம்பரசன் இன்று வெளியிட்டார்.
Similar News
News August 20, 2025
நெல்லை: தேர்வு இல்லை! ரயில்வே வேலை வாய்ப்பு!

நெல்லை இளைஞர்களே, மத்திய ரயில்வே 2,418 அப்ரண்ட்டிஸ் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10th (அ) ITI முடித்தவர்கள் செப். 11க்குள் விண்ணப்பிக்கலாம். 15 முதல் 25 வயதுள்ளவர்கள் rrccr.com என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்களுக்கு இங்கே <
News August 20, 2025
நெல்லை: FREE கேஸ் சிலிண்டர் வேண்டுமா!

நெல்லை மக்களே; உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இங்கே கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கப்படும். மறக்காம SHARE பண்ணுங்க
News August 20, 2025
தமிழகத்தில் முதல் முறையாக நெல்லையில் அறிமுகம்

நெல்லை அரசு மருத்துவமனையில் தமிழக அளவில் முதல் முறையாக நோயாளிகளின் பதிவு மற்றும் சிகிச்சை விபரங்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு தனி செயலி மூலம் அவர்களுக்கு விவரங்களை தெரிவிக்கும் ஹெச் எம் ஐ எஸ் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியை பயன்படுத்துவதன் மூலம் தாங்கள் ஏற்கனவே எடுத்த சிகிச்சை விபரங்களை அடுத்து வரும் நாட்களில் காட்டி மேல் சிகிச்சை பெற முடியும். *எல்லாரும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க