News March 6, 2025
சென்னை கோட்டத்தில் 2024 இல் ரயில் மோதி 696 பேர் பலி

சென்னை கோட்டத்தில் மட்டும் கடந்த 2024ஆம் ஆண்டில் ரயில்கள் மோதி 696 பேர் பலியாகியுள்ளனர். இதுகுறித்து தெற்கு ரயில்வே கோட்ட உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ”2024இல் மட்டும் ரயில்கள் மோதியும், ரயில்களில் இருந்து தவறி விழுந்தும் 1,196 பேர் உயிரிழந்துள்ளனர்” என்றார். இதில் அதிகபட்சமாக சென்னை கடற்கரை- விழுப்புரம் தடத்தில் 500 பேர் வரை உயிரிழந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News March 6, 2025
மர்ம நோயால் 13 பேர் மரணம்

சத்தீஸ்கரின், சுக்மா மாவட்டத்தில் பரவி வரும் மர்ம நோயால் மக்கள் பீதியடைந்துள்ளனர். ஒரு மாதத்திற்குள் 13 பேர் மார்பு வலி மற்றும் இருமல் காரணமாக இறந்துள்ளனர். நோய் – அதன் காரணங்கள் குறித்த எந்த தகவலும் தெரியவில்லை. சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தினர். பருவநிலை மாற்றம் மற்றும் காட்டில் நாள் முழுவதும் உழைத்த பிறகு நீரிழப்பு ஏற்படுவதால் இறப்பு நிகழ்வதாக அவர்கள் நம்புகிறார்கள்.
News March 6, 2025
IPL-ல் ஆடை கட்டுப்பாடு? – பிசிசிஐ புதிய திட்டம்!

மார்ச் 22-ல் தொடங்கும் ஐபிஎல் தொடரை காண இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்நிலையில், வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. போட்டிக்கு பிறகான நிகழ்ச்சியில் வீரர்கள் ஸ்லீவ்லெஸ் ஆடை அணியக் கூடாது என்பதுதான் அந்த கட்டுப்பாடு. இதனை முதல் முறை மீறினால் எச்சரிக்கப்படும் என்றும், அடுத்த முறை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
News March 6, 2025
விஜய்க்கு குவியும் பாராட்டுகள்

விஜய் தலைமையிலான தவெக சார்பில் சென்னையில் நாளை இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. இதற்காக, தயார் செய்யப்பட்டிருக்கும் அழைப்பிதழில் தவெகவின் கொடியோ, விஜய்யின் போட்டோவோ இடம்பெறாதது பொது மக்களை கவர்ந்துள்ளது. விஜய், அனைவருக்குமான பொதுவான அரசியல் செய்வதாக இணையத்தில் பலர் பாராட்டி வருகின்றனர். இது குறித்த உங்களது கருத்து என்ன?