News May 26, 2024
பப்புவா நியூ கினியா பயங்கர நிலச்சரிவில் 670 பேர் பலி

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 670க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தெற்கு பசுபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் கடந்த வெள்ளிக் கிழமை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழையால், அதிகாலை 3 மணிக்கு நிகழ்ந்த இந்த சம்பவத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மண்ணில் புதைந்தனர். மீட்புப் பணிகள் நடந்து வருவதாக ஐ.நா. அமைப்பு கூறியுள்ளது.
Similar News
News March 20, 2026
போரால் அழிவு.. இழப்பீடு கேட்கும் ஈரான்

தங்களது நாட்டில் ஏற்பட்ட அனைத்து சேதங்களுக்கும் UAE-க்கும் பொறுப்பு உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் மீது தாக்குதல் நடத்த US படைகளுக்கு தனது நிலப்பரப்பை பயன்படுத்த UAE அனுமதித்ததாகவும் குற்றஞ்சாட்டி இருக்கிறது. எனவே, அந்நாடு உரிய இழப்பீட்டை வழங்கவேண்டும் என ஐநா பொதுச் செயலாளருக்கு கடிதம் மூலமாக ஈரான் வலியுறுத்தியுள்ளது.
News March 20, 2026
ராசி பலன்கள் (20.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
News March 20, 2026
அன்புமணி, TTV அவசர டெல்லி பயணம்

NDA கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில், டெல்லியில் அமித்ஷாவை EPS நேரில் சந்தித்துள்ளார். இந்நிலையில் கூட்டணி தலைவர்களான அன்புமணி, TTV தினகரன் ஆகியோரும் நாளை டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, தொகுதிப் பங்கீடு இறுதிசெய்யப்பட்டு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.


