News November 14, 2024
66,000 மாணவர்களுக்கு கடிதம் எழுதிய சிஇஓ

நெல்லையில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் மாணவர்களுக்கு 2 பக்க கடிதத்தை எழுதியுள்ளார். அதில் சக மாணவர்களிடமும் உங்கள் ஆசிரியர்களிடமும் அன்பை விதையுங்கள், போதைப் பொருள்களுக்கு வாழ்க்கையை அழித்துக்கொள்ளாதீர் என அறிவுரைகள் கடிதத்தில் இடம்பெற்றுள்ளன. நெல்லையில் 10, 11, 12ஆம் வகுப்பைச் சேர்ந்த 66,000 மாணவர்களுக்கும் இந்தக் கடிதம் இன்று நேரடியாக வழங்கப்படுகிறது.
Similar News
News March 1, 2026
நெல்லை: தொலைந்த PHONE-ஐ கண்டுபிடிப்பது இனி சுலபம்.!

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அத்தகைய செல்போன் தொலைந்து விட்டால் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது?. அப்படி உங்களது போன் தொலைந்து / திருடப்பட்டுவிட்டால்<
News March 1, 2026
நயினார் நாகேந்திரன் தலைமையில் பிரதமரை வரவேற்க கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி இன்று கூட்டணி மாநாட்டில் கலந்து கொள்கிறார். தமிழகம் வர உள்ளதால் நெல்லை எம்எல்ஏ நைனார் நாகேந்திரன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறார். மாநாட்டு திடலில் நடைபெற்று வரும் இறுதிகட்ட பணிகளை மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் மற்றும் 2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பொறுப்பாளர் பியூஷ் கோயல், மத்திய இணை அமைச்சர் முருகன், அதிமுக நிர்வாகிகள் ஆகியோர் கவனித்து வருகின்றனர்.
News March 1, 2026
திருநெல்வேலி: பெண் உட்பட 4 பேர் குண்டாஸில் கைது

நெல்லை மாவட்டம், தாழையூத்து திருக்குறுங்குடி, மானூர் மற்றும் வீரவநல்லூர் பகுதியில் கஞ்சா விற்ற வழக்கில் பேராட்சி செல்வி, சண்முகசுந்தரம், மாரிமுத்து, கோயில்ராஜை போலீசார் கைது செய்தனர். நெல்லை எஸ்பி பிரசன்ன குமார் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சுகுமார் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். பேராட்சி செல்வி மதுரை பெண்கள் தனி சிறையில் அடைக்கப்பட்டார்.


