News April 13, 2025
65 வயதில் மறுமணம்; சித்த மருத்துவரை ஏமாற்றிய பெண்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராமநாதன்(65). சித்த மருத்துவரான இவரை, திருமணம் செய்துகொள்வதாகச் கூறி, நகைகள் வாங்கி ஏமாற்றிய வழக்கில் 57 வயதான கீதா என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் இதே மாதிரியான மோசடிகளில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் நகைகள் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து, கீதாவை சிறையில் அடைத்தனர்.
Similar News
News April 14, 2025
ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
News April 14, 2025
திருவண்ணாமலை இன்றைய வெயில் நிலவரம்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது. இந்நிலையில் இன்று திருவண்ணாமலையில் இன்றைய அதிகபட்ச வெப்பநிலையாக 38 டிகிரி செல்சியஸ் ஆகவும், 100.4 டிகிரி பாரன்ஹீட் ஆகவும் பதிவாகியுள்ளது. மேலும் நண்பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கவும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
News April 13, 2025
காரும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் காட்டுக்குளம் பகுதி அருகே புதுச்சேரியில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த கார், திருவண்ணாமலையில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்தியிலே உயிரிழந்தனர். மேலும், கார் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து நிகழ்ந்திருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.