News January 6, 2026
6,300 டன் திடக்கழிவுகள் அகற்றம்: மாநகராட்சி

சென்னை மாநகராட்சி பகுதிகளில் இன்று 781 பூங்காக்களில் தீவிரத் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தினசரி சராசரியாக 6,300 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் மற்றும் 1,000 மெட்ரிக் டன் கட்டட இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக, 05.01.26 அன்று 1,373 பேருந்து நிறுத்தங்களில் தூய்மை பணிகள் நடைபெற்ற நிலையில், இன்று பூங்காக்களில் தேவையற்ற செடிகள், அகற்றப்பட்டதாக மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
Similar News
News January 29, 2026
சென்னை: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

சென்னை மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <
News January 29, 2026
கோயம்பேட்டில் தக்காளி கிலோ. 6-க்கு விற்பனை!

கோயம்பேடு சந்தைக்கு, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினசரி தக்காளி விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே தக்காளியின் வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது. இன்று 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்தது. இதையடுத்து மொத்த விற்பனையில் தக்காளியின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து, ஒரு கிலோ ரூ.6-க்கு விற்கப்பட்டது.
News January 29, 2026
சென்னை: முக்கிய ஏரிகளின் தற்போதைய நீர்மட்டம்

சென்னை குடிநீர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளின் நீர்மட்ட நிலவரம் இன்று (ஜன.29) வெளியிடப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 3381 மில்லியன் கன அடி நீரும், புழல் ஏரியில் 3046 மில்லியன் கன அடி நீரும் இருப்பு உள்ளது. பூண்டி ஏரி அதன் முழு கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியை எட்டியுள்ளது. வீராணம் ஏரியில் 914 மில்லியன் கன அடியும், சோழவரத்தில் 532 மில்லியன் கன அடி நீர் இருப்பதாக தெரிவித்துள்ளது.


