News December 31, 2024
62 கொலை குற்றவாளிகள் கைது – எஸ்பி

2024-ஆம் ஆண்டில் விழுப்புரத்தில் 392 திருட்டு குற்ற வழக்குகளில் 4 கொள்ளை, 28 வழிபறி, 360 திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்ட 255 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு ரூ.1,50,40,250 மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 34 கொலை வழக்குகளில் 62 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 17 கொலை வழக்குகளில் 38 குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளதாக எஸ்பி தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 4, 2025
எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில், உலக எய்ட்ஸ் தினம் 2025 முன்னிட்டு எச்.ஐ.வி / எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (டிச.04) கையொப்பமிட்டு துவக்கி வைத்தார். உடன் உதவி ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் இருந்தனர்.
News December 4, 2025
விழுப்புரம் மக்களே நீண்ட ஆயுள் பெற இந்த கோவிலுக்கு போங்க!

விக்கிரவாண்டி அகஸ்தீஸ்வரர் கோயில் தொன்மையான பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தத கோவில் ஆகும். இந்த கோவிலில் மூலவர் அகஸ்தீஸ்வரர், தாயார் தர்மசவர்த்தினி அருள்கின்றனர். இங்கு வந்து பிரதோஷ காலத்தில் சிவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும், நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அத்துடன், திருமணத் தடை நீங்கவும், கல்வியில் சிறக்கவும் பக்தர்கள் இங்கு வழிபடுகிறார்கள்.
News December 4, 2025
மாரத்தான்: பாராட்டு சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில், உலக எய்ட்ஸ் தினம் 2025 முன்னிட்டு எச்.ஐ.வி / எய்ட்ஸ் பற்றிய மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கோப்பைகளை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வழங்கினார்.


