News April 15, 2025
நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம்

61 நாள் மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. ஆண்டுதோறும் ஏப்.15 – ஜூன் 14 வரை மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருக்கும். இந்த காலகட்டத்தில் விசைப் படகுகள், இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. குமரி முதல் திருவள்ளூர் வரையிலான கிழக்கு கடற்கரை பகுதியில் சுமார் 15,000 படகுகள் கடலுக்கு செல்லாது. இதனால் சென்னை, நாகை, தூத்துக்குடியில் மீன்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
Similar News
News January 15, 2026
செங்கல்பட்டு இரவு பணி செய்யும் காவலர் விவரம்

செங்கல்பட்டு இன்று (ஜனவரி-15) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News January 15, 2026
சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு திமுகவினரே காரணம்: TTV

TN-ல் சட்டம் ஒழுங்கு சீர்கேடுக்கு திமுகவினரின் செயல்பாடுகளே காரணம் என TTV விமர்சித்துள்ளார். தனது X-ல் அவர், கள்ளத்துப்பாக்கி விவகாரத்தில் கடந்தாண்டு அரக்கோணத்திலும், தற்போது நெல்லையிலும் திமுக நிர்வாகிகள் கைதானதை சுட்டிக்காட்டி, சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் திமுகவினருக்கு தொடர்பிருப்பதாக சாடியுள்ளார். இப்பிரச்னையில் CM ஸ்டாலின் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
News January 15, 2026
பெண்ணின் திருமண வாழ்க்கையை முறித்த பொய்

பொய்யான தகவல்களை சொல்லி நடந்த திருமணத்தை செல்லாது என அறிவிக்க முடியும் என்று ஜார்க்கண்ட் HC தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு ஒன்றில், திருமணத்தில் உண்மைகளை மறைப்பது வாழ்க்கை துணையை மனரீதியாக கொடுமைப்படுத்துவதற்குச் சமம் என்றும் கோர்ட் கூறியுள்ளது. இந்த வழக்கில், உண்மையை மறைத்து பெண் திருமணம் செய்தது உறுதியானதால், கணவர் கோரிய விவாகரத்தை வழங்கி கோர்ட் உத்தரவிட்டது. இதுபற்றி உங்க கருத்து?


