News April 12, 2025
61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம்-அரசு அறிவிப்பு

புதுவை மீன்வளத்துறை சார்பு செயலர் புனிதமேரி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மீன்வளங்களை பாதுகாக்கும் வகையில் வரும் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடிப்பு தடைக்காலம் அறிவிக்கப்படுகிறது. மேலும், அனைத்து வகை படகுகள், குறிப்பாக இழுவலை கொண்ட விசை படகில் மீன்பிடிப்பது தடை செய்யப்படுகிறது” என்று கூறியுள்ளார். இதை உங்க மீனவ நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க…
Similar News
News April 15, 2025
புதுவை: உதவியாளர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் உதவியாளர் பணியிடத்திற்கான முதல் நிலைத் தேர்வு ஏப்.27 ஞாயிற்றுக்கிழமை, புதுச்சேரி காரைக்கால் மாஹே ஏனாம் பகுதிகளில் நடைபெற இருக்கின்றது. இத்தேர்வுக்கான அனுமதி சீட்டை தேர்வர்கள் http://recruitment.i-v.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து நாளை 16ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு செயலர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
News April 15, 2025
திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி எப்போது?

புதுச்சேரி மாநிலம் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் கடந்த மார்ச் 29ஆம் தேதி சனிப்பெயர்ச்சி என திருக்கணித பஞ்சாகப்படி கூறப்பட்டது. ஆனால் திருநள்ளாறு தேவஸ்தானம் சனிப்பெயர்ச்சி இந்தாண்டு இல்லை என அறிவித்திருந்தது. இந்நிலையில் திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி 2026 மார்ச் 06 ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளது. அதில் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறது. இதை SHARE செய்யவும்
News April 15, 2025
புதுவை ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து அரசு அலுவலகங்களில் அலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அந்த வகையில் நேற்று துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு அலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து இதுபோல் நடப்பதால் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.