News April 11, 2025
இந்தியாவில் இருந்து 600 டன் ஐபோன் ஏற்றுமதி

இந்தியாவில் இருந்து USA-க்கு 600 டன் ஐ-போன்கள் (15 லட்சம் போன்கள்) ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீதான வரியை USA உயர்த்தியுள்ளது. இதை தற்காலிகமாக 90 நாட்கள் டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார். ஆதலால் வரி அமலுக்கு வரும் முன்பு, USA-க்கு அதிக ஐபோன்களை ஏற்றுமதி செய்யும் பணியில் ஆப்பிள் ஈடுபட்டுள்ளது.
Similar News
News November 27, 2025
சென்னையை புயல் தாக்கப் போகிறதா?.. வந்தது எச்சரிக்கை

வங்கக் கடலில் இன்று உருவாகியுள்ள டிட்வா புயல் கரையை கடக்கும் இடத்தை IMD கணித்துள்ளது. அதன்படி, நவ.30-ம் தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திரா கடற்கரைகளுக்கு இடையே புயல் கரையை கடக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், சென்னையை புயல் தாக்க வாய்ப்பிருப்பதாக வெதர்மேன்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், புயலின் நகர்வுகளை பொறுத்து கணிப்புகள் மாறலாம்.
News November 27, 2025
MGR, ஜெ., போல விஜய்யை CM ஆக்குவார்: ஆதவ் அர்ஜுனா

தமிழகத்தில் ஊழலில்லாத, நேர்மையான புதிய நிர்வாகத்தை உருவாக்க <<18401023>>செங்கோட்டையன்<<>> தவெகவில் இணைந்துள்ளதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதாவை முதல்வராக்க உதவியது போல விஜய்யை CM ஆக்க செங்கோட்டையன் துணை நிற்பார் என்றும் அவர் தெரிவித்தார். அனைவரும் இணைந்து ஒரு புதிய வரலாற்றை படைக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
News November 27, 2025
WPL: ₹3.2 கோடிக்கு தீப்தி சர்மா ஏலம்

WPL ஏலத்தில் இந்திய ஆல்ரவுண்டர்
தீப்தி சர்மாவை ₹3.2 கோடிக்கு UP வாரியர்ஸ் வாங்கியுள்ளது. அவரை வாங்க டெல்லி கேபிடல்ஸ் ஆர்வம் காட்டிய நிலையில், இறுதியாக RTM வாய்ப்பை பயன்படுத்தி தீப்தி சர்மாவை UP வாரியர்ஸ் தட்டித் தூக்கியது. ஆஸ்திரேலிய வீராங்கனை மெக் லேனிங்கையும் ₹1.9 கோடிக்கு UP வாரியர்ஸ் ஏலம் எடுத்தது. இந்திய பந்துவீச்சாளர் ரேணுகா சிங் ₹60 லட்சத்துக்கு குஜராத் ஜெயண்ட்ஸில் இணைந்துள்ளார்.


