News March 4, 2025

60% போக்சோ வழக்குகள் நிலுவையில்.. ராமதாஸ் சாடல்

image

60% போக்சோ வழக்குகள் இன்னும் விசாரிக்கப்படாமல் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதாக ராமதாஸ் விமர்சித்துள்ளார். 2015-22 வரை 21,672 போக்சோ வழக்குகள் பதிவானதாகவும், அதில் 30% போதிய ஆதாரங்கள் இல்லை என குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஓராண்டுக்குள் தீர்க்கப்பட வேண்டிய இவ்வழக்குகள், இன்று வரை தேங்கி இருப்பதற்கு TN அரசு பொறுப்பேற்க வேண்டும் எனவும் சாடியுள்ளார்.

Similar News

News November 12, 2025

ஒரு மாதம் முழுவதும் காய்கறிகள்.. டிரை பண்ணுங்க

image

நீங்கள் ஒரு மாதம் தொடர்ந்து காய்கறிகளை அதிகளவில் உணவில் சேர்த்து வந்தால், உங்கள் உடலில் என்னென்ன நடக்கும் என்று தெரியுமா? நீங்கள் நினைப்பதை விட அதிகளவிலான நன்மைகள் கிடைக்கும். அவை என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று உங்களுக்கு தெரிந்த நன்மைகளை கமெண்ட்ல சொல்லுங்க.

News November 12, 2025

நீண்ட நாள்களுக்கு பிறகு மகிழ்ச்சி: அன்புமணி

image

சென்னையில் பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் பேசிய அன்புமணி, நீண்ட நாள்கள் கழித்து தற்போதுதான் நிம்மதியாகவும், தைரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். மேலும், கட்சிக்கும், ராமதாஸுக்கும் உண்மையாகத்தான் இருந்தேன்; இனிமேலும் உண்மையாகத்தான் இருப்பேன் எனக்கூறிய அவர், ராமதாஸுடன் இருப்பவர்கள் அவரது பெயரை கெடுத்து வருகின்றனர் என்றும் குற்றம் சாட்டினார்.

News November 12, 2025

BREAKING: முதல்முறையாக அரசு அறிவித்தது

image

டெல்லியில் நடந்தது பயங்கரவாத தாக்குதல் என மத்திய அரசு முதல்முறையாக அறிவித்துள்ளது. PM மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், செங்கோட்டை அருகே நடந்தது கோழைத்தனமான சம்பவம் என்றும், சதித்திட்டம் தீட்டியவர்களுக்கு நீதியின் முன்பு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்றும் சூளுரைத்தார்.

error: Content is protected !!