News March 4, 2025
60% போக்சோ வழக்குகள் நிலுவையில்.. ராமதாஸ் சாடல்

60% போக்சோ வழக்குகள் இன்னும் விசாரிக்கப்படாமல் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதாக ராமதாஸ் விமர்சித்துள்ளார். 2015-22 வரை 21,672 போக்சோ வழக்குகள் பதிவானதாகவும், அதில் 30% போதிய ஆதாரங்கள் இல்லை என குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஓராண்டுக்குள் தீர்க்கப்பட வேண்டிய இவ்வழக்குகள், இன்று வரை தேங்கி இருப்பதற்கு TN அரசு பொறுப்பேற்க வேண்டும் எனவும் சாடியுள்ளார்.
Similar News
News October 22, 2025
சத்யா நாதெள்ளாவின் சம்பளம் ₹846 கோடி

மைக்ரோசாப்ட் CEO சத்யா நாதெள்ளாவுக்கு இந்த வருஷம் எவ்வளவு இன்கிரீமெண்ட் தெரியுமா? கடந்த ஆண்டை விட 22% அதிகமாம். அதன்படி தற்போது அவர் ஆண்டுக்கு 96.5 மில்லியன் டாலர் (₹846 கோடி) சம்பளம் பெறுகிறார். சத்யா நாதெள்ளாவின் தலைமை மற்றும் அவரது குழுவால் AI துறையில் மைக்ரோசாப்ட் பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், இதனால் நிறுவன பங்குகள் விலையும் உயர்ந்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
News October 22, 2025
காதலர் தினத்தில் ‘ராட்சசன்’ காம்போ

‘ராட்சசன்’ மெகா வெற்றிக்கு பிறகு, அப்படத்தின் இயக்குநர் ராம்குமாரும், நடிகர் விஷ்ணு விஷாலும் இணைந்துள்ளதால், ‘இரண்டு வானம்’ படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. காதல் + அட்வெஞ்சர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை, 2026 பிப்ரவரியில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம். குறிப்பாக காதலர் தினத்தை முன்னிட்டு இப்படம் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News October 22, 2025
டாஸ்மாக் மாடல் அரசு: நயினார் விமர்சனம்

அரசு இயந்திரத்தின் மொத்த கவனத்தையும் சாராய விற்பனையில் திமுக அரசு திருப்பியதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். தீபாவளியையொட்டி ₹789 கோடிக்கு மது விற்றது டாஸ்மாக் மாடல் அரசின் கோர முகத்தை தோலுரித்து காட்டுவதாகவும் அவர் சாடியுள்ளார். கனமழையால் டெல்டாவில் நெற்பயிர் சேதமடைந்த நிலையில், தொய்வின்றி மது விற்பதுதான் திமுக அரசின் நாடு போற்றும் நல்லாட்சிக்கான இலக்கணமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.