News April 25, 2025
6 மாதத்திற்கு உள்ளே வரக்கூடாது: கமிஷனர்

கோவையில் குற்றச்சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் வகையில், அடிதடி, வழிப்பறி, கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை செய்து வரும் ரவுடிகளை கண்டறிந்து 6 மாதங்களுக்கு மாநகரை விட்டு வெளியேற்ற மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, தற்போது 29 ரவுடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்கள் 6 மாதங்களுக்கு, கோவை மாநகர பகுதிக்குள் வர தடை விதித்து உத்தரவிட்டார்.
Similar News
News April 25, 2025
இலவச பஸ் பாஸ் பெற அழைப்பு

கோவை கலெக்டர் பவன்குமார் நேற்று விடுத்த செய்தி குறிப்பில், மாவட்டத்தில் உள்ள பார்வைத்திறன், காது குறைபாடு, உடல் இயக்க குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட உள்ளது. இதை பெற, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரிலும், இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
News April 25, 2025
கோவைக்கு வரும் விஜய்!

தவெக பூத் கமிட்டி மாநாடு நாளை ஏப்.26, நாளை மறுநாள் ஏப்.27 ஆகிய தேதிகளில் கோவை, குரும்பபாளையம் தனியார் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொள்வதற்காக, சென்னையில் இருந்து நாளை காலை 08:30 மணியளவில், கோவை விமானம் நிலையத்திற்கு வருகை தர உள்ளார். எனவே, அவரை வரவேற்பதற்காக, கோவை மாவட்ட தவெக கட்சி செயலாளர்கள் சார்பாக, நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News April 25, 2025
இலவச பயிற்சி வகுப்புகள்

கோவையில் காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஏப்.26ஆம் தேதி முதல் துடியலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளன. இப்பயிற்சி வகுப்புகள் சனி மற்றும் ஞாயிறு வார இறுதி நாட்களில் நடைபெறுகின்றன. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க மே.3ஆம் தேதி கடைசி ஆகும். போலீஸ் ஆக விரும்பும் நபர்கள் இப்பயற்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.