News May 7, 2025
ஆற்றில் மூழ்கி 6 பேர் மரணம்.. சோகத்தில் முடிந்த விடுமுறை

குஜராத் மேஷ்வோ ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறையை கழிக்க உறவினர் வீட்டிற்குச் சென்ற அவர்கள், அங்குள்ள ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது, ஆழம் தெரியாமல் ஒவ்வொருவராக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் அனைவரும் 14 – 21 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் இதுகுறித்து விசாரித்து வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 28, 2025
எயிட்ஸுக்கு தடுப்பூசி… விரைவில் இந்தியாவில்!

100% செயல்திறன் கொண்ட எயிட்ஸ்(HIV) தடுப்பூசி இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. USA-வின் கிலீட் சயன்சஸ் நிறுவனத்தின் இந்த தடுப்பூசி, FDA அங்கீகாரம் பெற்றுவிட்டது. இந்நிலையில் அதன் உரிமம் பெற்று இந்தியாவில் lenacapavir என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு விற்கப்படவுள்ளது. ஆண்டுக்கு 2 முறை இந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்டால் போதும். HIV தொற்று தாக்கும் ரிஸ்க் அதிகம் உள்ளவர்களுக்கு இது சிறந்த தீர்வாக அமையும்.
News November 28, 2025
இதெல்லாம் கூடிய சீக்கிரமே நடக்கப்போகுது..

தற்போது சாத்தியமில்லை எனக் கூறப்படும் இந்த விஷயங்கள் வருங்காலத்தில் சாத்தியமாகலாம். ➤ரூபாய் நோட்டுகள் பயன்பாடே இல்லாமல் போகலாம் ➤மனிதர்கள் 100 வயதை கடந்தும் வாழ்வர் ➤பலரின் நெருங்கிய நண்பனாக AI இருக்கும் ➤போனின் சார்ஜ் பல ஆண்டுகள் நீடிக்கலாம் ➤Mars-ல் மனிதர்கள் நடமாடலாம் ➤வீட்டுக்கு ஒரு ரோபோ இருக்கும் ➤வின்வெளியில் டூர் அடிப்பது சாதாரணமாகிவிடும். இதில் எதை பார்க்க நீங்கள் ஆவலுடன் இருக்கீங்க?
News November 28, 2025
ஷூட்டிங்கில் தமிழ் நடிகர் காலமானார்

புதுக்கோட்டையில் கார்த்தியின் ‘மார்ஷல்’ படத்தின் ஷூட்டிங் தளத்தில் துணை நடிகர் அய்யநாதன் என்பவர் உயிரிழந்துள்ளார். சிவகங்கையை சேர்ந்த அவர், படப்பிடிப்பு தளம் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் தங்கி இருந்தார். இந்நிலையில், மண்டபத்தின் மேலே இருந்து தவறி விழுந்து அவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.


