News May 7, 2025

ஆற்றில் மூழ்கி 6 பேர் மரணம்.. சோகத்தில் முடிந்த விடுமுறை

image

குஜராத் மேஷ்வோ ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறையை கழிக்க உறவினர் வீட்டிற்குச் சென்ற அவர்கள், அங்குள்ள ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது, ஆழம் தெரியாமல் ஒவ்வொருவராக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் அனைவரும் 14 – 21 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் இதுகுறித்து விசாரித்து வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 7, 2025

என்னிடம் எந்த பாட்சாவும் பலிக்காது: CM ஸ்டாலின்

image

மதுரையில் நடைபெற்ற அரசு விழாவில் பல திட்டங்களை அறிவித்த CM ஸ்டாலின், நாம் வளர்ச்சி அரசியலை பேசினால், அவர்கள் வேறு அரசியலை பேசுவதாக பாஜகவை மறைமுகமாக விமர்சித்தார். அவர்கள் எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும், அவற்றை முறியடிப்போம் என்று சூளுரைத்தார். மேலும், ‘இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கிட்ட அவர்கள் பாட்சா எல்லாம் பலிக்காது. எதுவும் எடுபடாது’ என்றும் தெரிவித்தார்.

News December 7, 2025

உதிர்ந்த மலராக மாறிய ஸ்மிருதி – பலாஷ் காதல்

image

ஸ்மிருதி மந்தனாவுடனான காதல் உறவு முடிவுக்கு வந்ததாக இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் தெரிவித்துள்ளார். <<18495884>>ஏற்கெனவே திருமணம் நிறுத்தப்பட்டதாக<<>> ஸ்மிருதி பதிவிட்டிருந்த நிலையில், பலாஷும் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். தனது வாழ்வில் மிகவும் கடினமான காலம் இது எனவும், உண்மையை அறியாமல் தவறான செய்திகளை பரப்புவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

News December 7, 2025

₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. வந்தாச்சு அப்டேட்

image

மகளிர் உரிமைத் தொகை திட்ட விரிவாக்க பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. டிச.12-ல் புதிய பயனர்களுக்கு ₹1,000 வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனிடையே, வங்கிகளுக்கு TN அரசு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக இணைந்தவர்களின் வங்கிக் கணக்கை ஜீரோ பேலன்ஸ் கணக்காக மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம், மினிமம் பேலன்ஸ் இல்லையென பணம் பிடிப்பது தவிர்க்கப்படும்.

error: Content is protected !!