News May 7, 2025
ஆற்றில் மூழ்கி 6 பேர் மரணம்.. சோகத்தில் முடிந்த விடுமுறை

குஜராத் மேஷ்வோ ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறையை கழிக்க உறவினர் வீட்டிற்குச் சென்ற அவர்கள், அங்குள்ள ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது, ஆழம் தெரியாமல் ஒவ்வொருவராக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் அனைவரும் 14 – 21 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் இதுகுறித்து விசாரித்து வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 22, 2025
சபரிமலைக்கு நவ.28 முதல் சிறப்பு பஸ்கள்

சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூர் ஆகிய பகுதிகளில் இருந்து நவ.28 முதல் ஜன.16 வரை கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சபரிமலை செல்லும் பக்தர்கள் www.tnstc.in இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். டிச.27 – 30 வரை கோயில் நடை சாத்தப்படுவதால் அந்த நாள்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படாது.
News November 22, 2025
இந்தியாவில் தமிழகம் தான் டாப்.. எதில் தெரியுமா?

பாலின சமத்துவம், பொது பாதுகாப்பு, பன்முகத்தன்மை ஆகியவற்றை உள்ளடக்கிய Civic Sense-ல் எந்த மாநிலம் சிறந்து விளங்குகிறது என்ற ஆய்வை இந்தியா டுடே நடத்தியது. இதில், சமூக நடத்தையில், தமிழகம் ஒட்டுமொத்த இந்தியாவையும் வாயை பிளக்க வைத்துள்ளது. இதேபோல், டாப் 10-ல் இடம்பிடித்த மாநிலங்களை போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 22, 2025
கழுத்துவலி, முதுகு வலி இருக்கா? இப்படி தூங்குங்க!

தலையணை இல்லாமல் பலராலும் தூங்க முடியாது. ஆனால் அப்படி தூங்கினால் பல நன்மைகள் உள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர். *கழுத்து வலி, முதுகு வலியை குறைக்கும் *காலை நேர தலைவலி குறையும் *ஒட்டுமொத்த தூக்கத்தின் தரம் மேம்படும் *முகப்பரு, சுருக்கங்கள் கூட குறையும் *மன அழுத்தத்தின் அளவை குறைக்கும். *அதேநேரம், தலையணையை ஒரேடியாக தவிர்க்காமல், படிப்படியாக உயரத்தை குறைக்க டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.


