News May 7, 2025

ஆற்றில் மூழ்கி 6 பேர் மரணம்.. சோகத்தில் முடிந்த விடுமுறை

image

குஜராத் மேஷ்வோ ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறையை கழிக்க உறவினர் வீட்டிற்குச் சென்ற அவர்கள், அங்குள்ள ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது, ஆழம் தெரியாமல் ஒவ்வொருவராக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் அனைவரும் 14 – 21 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் இதுகுறித்து விசாரித்து வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 21, 2025

விஜய் சினிமா டயலாக்குகளை மட்டுமே பேசுகிறார்: வைகோ

image

அடுத்த ஆட்சி நம்முடையதுதான் என விஜய் பேசி வருவது ஒருபோதும் நடக்காது என வைகோ தெரிவித்தார். கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை, சென்னைக்கு அழைத்து சந்தித்தது அவரின் பொறுப்பற்ற செயல் எனவும் சாடினார். அவர் சினிமா டயலாக்குகளை மட்டுமே பேசி வருவதாகவும், CM ஸ்டாலினை Uncle என சொல்வதெல்லாம் தெனாவட்டு என்றும் விமர்சித்துள்ளார்.

News November 21, 2025

7 தங்க பதக்கத்தை வென்ற இந்திய சிங்கப் பெண்கள்

image

உலகக் கோப்பை குத்துச்சண்டையில் நேற்று ஒரேநாளில் 7 இந்திய வீராங்கனைகள் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். 48 கிலோ(KG) பிரிவில் மீனாட்சி, 54KG-ல் பிரீத்தி, 70KG-ல் பிரிவில் அருந்ததி சவுத்ரி, 80KG-ல் நுபுர், 51KG-ல் ஜதுமணி, 65KG-ல் அபினாஷ் ஜம்வால். 80KG-ல் அங்குஷ் பன்ஹால் ஆகியோர் தங்கத்தை முத்தமிட்டனர். மற்றொரு இந்தியா வீராங்கனை ஹிதேஷ், கஜகஸ்தான் வீராங்கனையிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றார்.

News November 21, 2025

மெட்ரோ திட்டத்தில் பாஜகவுக்கு உள்நோக்கம்: செந்தில் பாலாஜி

image

மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்ததாக கூறி கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட செந்தில் பாலாஜி, மத்திய அரசு அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். திட்ட அறிக்கையில் சந்தேகம் இருந்தால், அதைத் தெளிவுபடுத்த 15 மாதங்கள் அவகாசம் எடுக்க வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்தார். மேலும் TN-க்கு BJP அரசு இதுவரை ஏதாவது சிறப்புத் திட்டம் கொண்டு வந்துள்ளதா? என்றும் கேள்வி எழுப்பினார்.

error: Content is protected !!