News May 7, 2025
ஆற்றில் மூழ்கி 6 பேர் மரணம்.. சோகத்தில் முடிந்த விடுமுறை

குஜராத் மேஷ்வோ ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறையை கழிக்க உறவினர் வீட்டிற்குச் சென்ற அவர்கள், அங்குள்ள ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது, ஆழம் தெரியாமல் ஒவ்வொருவராக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் அனைவரும் 14 – 21 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் இதுகுறித்து விசாரித்து வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 14, 2025
கெத்தாக நிற்கும் நிதிஷ்குமார்

2025 பிஹார் தேர்தலின் நாயகன் என்றால் அது நிதிஷ்குமார்(74) தான். அவரின் JD(U) கட்சி 2015-ல் 71 இடங்கள் வென்ற நிலையில் 2020-ல் 43 ஆகச் சுருங்கியது. அடிக்கடி கூட்டணி மாறினாலும் 19 ஆண்டுகளாக CM பதவியை பிடித்துக் கொண்டிருக்கும் நிதிஷ் 9-வது முறையாக அரியணை ஏறப்போகிறார். ஆனால், இந்த முறை 80-க்கு மேற்பட்ட இடங்கள் வென்று கெத்தாக CM ஆகிறார். அனைத்து தரப்பினர் ஆதரவு, பெண்களிடம் செல்வாக்கு இவரது பெரும்பலம்.
News November 14, 2025
இனி RJD ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை: PM மோடி

பிஹார் மக்கள் அனைத்து தேர்தல் சாதனைகளையும் முறியடித்துவிட்டதாக PM மோடி தெரிவித்துள்ளார். பிஹாரில் இருந்து முற்றிலுமாக RJD நீக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இனி அவர்களின் ஆட்சி மீண்டும் வர வாய்ப்பே இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் இஸ்லாமியர்கள், யாதவர்கள் கூட்டணியில் வெற்றி பெறலாம் என நினைத்ததாகவும், ஆனால் நாம் பெண்கள் மற்றும் இளைஞர்களால் வெற்றி பெற்றுள்ளோம் எனவும் மோடி கூறியுள்ளார்.
News November 14, 2025
BREAKING: பிஹாரில் 125+ இடங்களில் NDA வெற்றி

பிஹார் தேர்தலில் NDA கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, 147 தொகுதிகளின் முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆட்சி அமைப்பதற்கு தேவையான 122 இடங்களுக்கு மேல் NDA கூட்டணி கைப்பற்றியுள்ளது. MGB கூட்டணி 17 இடங்களிலும், ஒவைசியின் AIMIM 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. வாக்கு எண்ணிக்கை முடிவில் NDA கூட்டணி 200+ இடங்களை வெல்ல வாய்ப்புள்ளது.


