News May 7, 2025
ஆற்றில் மூழ்கி 6 பேர் மரணம்.. சோகத்தில் முடிந்த விடுமுறை

குஜராத் மேஷ்வோ ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறையை கழிக்க உறவினர் வீட்டிற்குச் சென்ற அவர்கள், அங்குள்ள ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது, ஆழம் தெரியாமல் ஒவ்வொருவராக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் அனைவரும் 14 – 21 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் இதுகுறித்து விசாரித்து வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 15, 2025
சத்குரு முகத்தை காட்டி ₹3.75 கோடி மோசடி

இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் கோடிகளை அள்ளலாம் என்று சத்குரு பேசுவது போன்ற போலி வீடியோவை சமூகவலைதளத்தில் பெங்களூருவை சேர்ந்த பெண்(57) பார்த்துள்ளார். போலி AI என தெரியாமல், சத்குரு மீதான நம்பிக்கையில், சுமார் ₹3.75 கோடியை ஆன்லைன் டிரேடிங்கில் அப்பெண் முதலீடு செய்துள்ளார். ஆனால், லாபத்தை withdraw செய்ய முடியாததால் அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். மக்களே உஷார்!
News September 15, 2025
திராவிட இயக்க கருவியை யூஸ் பண்றேன்: பா.ரஞ்சித்

நேபாள ரேப்பர் கூறும் கருத்துகள் மீது தனக்கு முரண்கள் இருந்தாலும், ஒரு கலைஞரால் இத்தனை பேரை கிளர்ந்தெழ செய்ய முடியும் என பா.ரஞ்சித் கூறியுள்ளார். கலை ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணமாக நேபாள போராட்டம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், திராவிட இயக்க காலத்தில் எப்படி சினிமாவை ஒரு கருவியாக பயன்படுத்தினார்களோ, அதேபோல மீண்டும் சினிமாவை அரசியல்படுத்த தான் ப்ட்க்ஹ்க்ஃப்
News September 15, 2025
தமிழ்நாட்டில் பேய்கள் நடமாட்டம் உள்ள இடங்கள்

தமிழ்நாட்டில் பேய்கள் நடமாட்டம் உள்ள இடங்கள் குறித்து உங்களுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால், சில இடங்கள் தெரியாமலும் இருக்கலாம். அதன்படி மேலே சில இடங்களின் போட்டோக்கள் இணைக்கப்பட்டு உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக பாருங்கள். அதில், நீங்கள் இதுவரை கேள்விப்படாத பேய் நடமாட்டம் உள்ளதாக கூறப்படும் இடம் இருந்தால் கமெண்ட் பண்ணுங்க.