News May 7, 2025
ஆற்றில் மூழ்கி 6 பேர் மரணம்.. சோகத்தில் முடிந்த விடுமுறை

குஜராத் மேஷ்வோ ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறையை கழிக்க உறவினர் வீட்டிற்குச் சென்ற அவர்கள், அங்குள்ள ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது, ஆழம் தெரியாமல் ஒவ்வொருவராக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் அனைவரும் 14 – 21 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் இதுகுறித்து விசாரித்து வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 7, 2025
வாட்ஸ்ஆப் to பிற ஆப்களுக்கும் மெசேஜ் அனுப்பலாம்.. ஆனால்?

வாட்ஸ்ஆப்பில் இருந்து அரட்டை உள்ளிட்ட பிற மெசேஜிங் ஆப்களுக்கும், அந்த ஆப்களை டவுன்லோட் செய்யாமலேயே, மெசேஜ் அனுப்பும் வசதியை, மெட்டா பரிசோதித்து வருகிறது. டிஜிட்டல் துறையில் குறிப்பிட்ட நிறுவனத்தின் ஆதிக்கத்தை தடுக்க, ஐரோப்பிய யூனியன் சட்டங்களை கடுமையாக்கியதால், ஐரோப்பிய நாடுகளில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்தியாவில் அறிமுகப்படுத்துவது குறித்து மெட்டா எந்த தகவலையும் வெளியிடவில்லை.
News November 7, 2025
FULL MOON-ல் எத்தனை வகை இருக்குனு தெரியுமா?

நிலவு என்றாலே அழகு தான். அதிலும் பெளர்ணமி அன்று வானில் தோன்றும் முழு நிலவின் அழகை ரசிப்பது பலருக்கும் பிடித்தமான ஒன்று. இப்படி வரும் சில முழு நிலவுகளை நாம் சூப்பர் மூன், பிளட் மூன் என்றெல்லாம் அழைப்போம். அப்படி எத்தனை வகை முழு நிலவுகள் உள்ளன, அதன் பெயர் என்ன, காரணம் என்ன என்பது பற்றி அறிய மேலே SWIPE பண்ணுங்க…
News November 7, 2025
ஓவியம் பாடும் காவியம் ருக்மிணி வசந்த்

காந்தாரா: சாப்டர் 1-ல் மெய்சிலிர்க்க வைத்த ருக்மிணி வசந்த், அதன்பிறகு தொடர்ச்சியாக சேலையில் இருக்கும் போட்டோக்களை அதிகளவில் பகிர்ந்து வருகிறார். படத்தில், இளவரசி கனகவதியாக வாழ்ந்த ருக்மிணி, சேலையில் பிரம்மன் தீட்டிய ஓவியமாக இருக்கிறார். தற்போது, இவர் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள போட்டோக்களில், அவரது கண்கள் காவியம் பேசுகின்றன. உங்களுக்கு பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.


