News May 7, 2025
ஆற்றில் மூழ்கி 6 பேர் மரணம்.. சோகத்தில் முடிந்த விடுமுறை

குஜராத் மேஷ்வோ ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறையை கழிக்க உறவினர் வீட்டிற்குச் சென்ற அவர்கள், அங்குள்ள ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது, ஆழம் தெரியாமல் ஒவ்வொருவராக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் அனைவரும் 14 – 21 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் இதுகுறித்து விசாரித்து வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 5, 2025
ஜெயலலிதா நினைவிடத்தில் முடிவை அறிவித்தார் ஓபிஎஸ்

தனியாக கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் இல்லை என ஓபிஎஸ் தனது முடிவை அறிவித்துள்ளார். மெரினாவில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு பேசிய அவர், செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பிறகு அவருடன் பேசவில்லை எனவும் தடாலடியாக கூறியுள்ளார். முன்னதாக வரும் 15-ம் தேதி தனிக்கட்சி குறித்த அறிவிப்பை OPS வெளியிட உள்ளதாக தகவல் வெளியானது கவனிக்கத்தக்கது.
News December 5, 2025
போர் அடிக்குது’னு ரீல்ஸ் பாக்குறீங்களா?

தொடர்ந்து ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருப்பதும் ஒருவித போதைக்கு அடிமையான நிலைதான் என மனநல நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதன் காரணமாக, Brain rot (மூளை அழுகல்) & கண் நோய்கள் அதிகரிக்கிறதாம். அதிகமாக ரீல்ஸ் பார்ப்பதால் குழந்தைகளுக்கு சுறுசுறுப்பு தன்மை குறைந்து, Dry eye syndrome பாதிப்பு அதிகரிக்கிறதாம். மேலும், பெரியவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படுவதுடன் ஒற்றைத் தலைவலி, தூக்கமின்மை போன்றவை உண்டாகிறதாம்.
News December 5, 2025
அதிமுகவில் இணைந்தனர்.. திமுக அதிர்ச்சி

திமுக, அதன் கூட்டணியில் உள்ள IUML உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விலகிய 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் அதிமுகவில் இணைந்தனர். திண்டுக்கல்லில் Ex அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முன்னிலையில் கட்சியில் இணைந்தவர்களுக்கு அதிமுகவினர் தங்களது கட்சித் துண்டை போர்த்தி வரவேற்பு அளித்தனர். BJP உடனான கூட்டணியால் இஸ்லாமியர்களின் ஆதரவு குறைந்ததாக விமர்சிக்கப்படும் நிலையில், இந்த இணைப்பு கூடுதல் கவனம் பெற்றுள்ளது.


