News February 25, 2025
பெயர் பலகையில் கருப்பு வண்ணம் பூசினால் 6 மாத சிறை

பெயர் பலகையில் கருப்பு வண்ணம் பூசினால் 6 மாத சிறை அளிக்கப்படும் என்று ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் ரயில்நிலைய பெயர் பலகையில் இருந்த ஹிந்தி வாசகத்தை திமுகவினர் அழித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், ரயில்வே சொத்து சட்டப்படி, இதுபோன்ற செயலில் ஈடுபடுவோரை 6 மாத சிறையில் அடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
Similar News
News February 25, 2025
மார்ச் 5இல் அனைத்து கட்சிக் கூட்டம்: CM ஸ்டாலின்

மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு முறையால் தமிழகத்தில் 8 எம்பி தொகுதிகள் குறைய வாய்ப்பு இருப்பதாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இது குறித்து விவாதிக்க மார்ச் 5ல் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என்றார். TN மிகப் பெரிய உரிமை போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறிய அவர், தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் மத்திய அரசு வஞ்சிக்கப் பார்க்கிறது என்றார்.
News February 25, 2025
நீங்கள் அட்வெஞ்சர் பிரியரா? புது பைக் இன்று அறிமுகம்

இந்தியாவில் இன்று DESERTX பைக்கை அறிமுகம் செய்கிறது DUCATI. மிடில் வெயிட் அட்வெஞ்சர் செக்மண்டில் இந்த பைக் அனைவராலும் விரும்பப்படும் என நம்பப்படுகிறது. BMW GS 850, Triumph tiger 800–க்கு போட்டியாக இந்த பைக் களமிறக்கப்படுகிறது. ஆஃப் ரோடை மனதில் வைத்து பைக்கின் பிரேமை DUCATI வடிவமைத்துள்ளது. என்ஜினை பொருத்தவரை 937 சிசி திறன் கொண்டது. இந்தியாவில் இதன் ஆன் ரோடு விலை 20 லட்சமாக இருக்கலாம்.
News February 25, 2025
சீமானுக்கு சோதனை காலமா?

நாதகவில் இருந்த முக்கிய நிர்வாகிகள் விலகல், நடிகை விஜயலட்சுமி எழுப்பிய பாலியல் புகார் தொடர்பான வழக்கு என அடுத்தடுத்து பிரச்னைகளில் சிக்கி வருகிறார் சீமான். இந்தச் சூழலில் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்டதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 10 பேர் கைதாகியுள்ளனர். அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள், அவருக்கு சோதனைக் காலமா? என எண்ணத் தோன்றுகிறது.