News March 18, 2024
திருச்சியில் ரூ.6 லட்சம் பறிமுதல்

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருச்சி அரியமங்கலம் அடுத்துள்ள சஞ்சீவி நகர் ஓயாமரி சாலையில் இன்று தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் கும்பகோணத்திலிருந்து வந்த வாகனத்தை சோதனை செய்தபோது அதிலிருந்து ரூ.4 லட்சம் கணக்கில் வராத தொகையை பறிமுதல் செய்தனர். இன்று காலையில் மட்டும் இதுவரை ரூ.6 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
Similar News
News October 31, 2025
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு கூட்டம்

தமிழக அரசின் சிறுபான்மை நலத்துறை சார்பில், திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இஸ்லாமியர்கள் பலர் கலந்து கொண்டு முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்திற்கு இணை மானியம் விரைந்து வழங்கிட வேண்டும், சிறுபான்மை மக்கள் வசிக்கு இடங்களில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை கூட்டத்தில் முன்வைத்தனர்.
News October 30, 2025
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு கூட்டம்

தமிழக அரசின் சிறுபான்மை நலத்துறை சார்பில், திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இஸ்லாமியர்கள் பலர் கலந்து கொண்டு முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்திற்கு இணை மானியம் விரைந்து வழங்கிட வேண்டும், சிறுபான்மை மக்கள் வசிக்கு இடங்களில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை கூட்டத்தில் முன்வைத்தனர்.
News October 30, 2025
திருச்சி: ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் கடன் உதவி

திருச்சி மக்களே, பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ வாங்க கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ.3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 1,000 பேருக்கு கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம்.


