News March 18, 2024
திருச்சியில் ரூ.6 லட்சம் பறிமுதல்

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருச்சி அரியமங்கலம் அடுத்துள்ள சஞ்சீவி நகர் ஓயாமரி சாலையில் இன்று தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் கும்பகோணத்திலிருந்து வந்த வாகனத்தை சோதனை செய்தபோது அதிலிருந்து ரூ.4 லட்சம் கணக்கில் வராத தொகையை பறிமுதல் செய்தனர். இன்று காலையில் மட்டும் இதுவரை ரூ.6 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
Similar News
News November 26, 2025
திருச்சி: எஸ்பி தலைமையில் குறைதீர் கூட்டம்

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் தலைமையில் எஸ்.பி அலுவலகத்தில் இன்று (நவ.,26) வாராந்தர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த குறைதீர்ப்பு கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்களின் மனுக்களை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் நேரடியாக பெற்று குறைகளை கேட்டறிந்தார். மேலும், பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
News November 26, 2025
திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர்கள், தங்களது எஸ்ஐஆர் படிவத்தில் கோரப்பட்டுள்ள வாக்காளர்கள் அல்லது வாக்காளர்கள் உறவினர்களின் 2002/2005 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் விவரங்கள் தெரியவில்லை என்றால், படிவத்தில் அடிப்படை விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து, படிவத்தின் இறுதியில் கையொப்பமிட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
News November 26, 2025
திருச்சி: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு வரும் டிச.4-ம் தேதி நெல்லை சந்திப்பிலிருந்து, திருவண்ணாமலைக்கு திருச்சி வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது நெல்லையிலிருந்து இரவு (டிச-3) 9:30 மணிக்கு புறப்பட்டு, அதிகாலை 3:30 மணிக்கு திருச்சி வந்தடைகிறது. பின்னர் மீண்டும் திருச்சியில் இருந்து 03:45-க்கு புறப்பட்டு, டிச.4-ம் தேதி காலை 8 மணி அளவில் திருவண்ணாமலை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


