News March 18, 2024
திருச்சியில் ரூ.6 லட்சம் பறிமுதல்

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருச்சி அரியமங்கலம் அடுத்துள்ள சஞ்சீவி நகர் ஓயாமரி சாலையில் இன்று தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் கும்பகோணத்திலிருந்து வந்த வாகனத்தை சோதனை செய்தபோது அதிலிருந்து ரூ.4 லட்சம் கணக்கில் வராத தொகையை பறிமுதல் செய்தனர். இன்று காலையில் மட்டும் இதுவரை ரூ.6 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
Similar News
News November 27, 2025
திருச்சி மாவட்டத்தில் தேடுதல் வேட்டை – எஸ்.பி

திருச்சி மாவட்டம் முழுவதும் நேற்றுமுன்தினம் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அதில், ராம்ஜி நகர் பகுதியில் ரூ.34,500 மதிப்புள்ள புகையிலை, திருவெறும்பூரில் ரூ.40,000 மதிப்புள்ள புகையிலை, துவரங்குறிச்சி பகுதியில் ரூ.30,000 மதிப்புள்ள புகையிலை, துவாக்குடி பகுதியில் ரூ.5570 மதிப்புள்ள புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக திருச்சி எஸ்.பி செல்வநகரத்தினம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
News November 27, 2025
திருச்சி: கணவன் அடித்தால் உடனே CALL பண்ணுங்க!

சமீப காலமாக பெண்களுக்கு எதிராக நிகழும் குடும்ப வன்முறைகள் அதிகரித்து கொண்டே வருகின்றன. இத்தகைய சூழலில் திருச்சி மாவட்ட பெண்கள் எந்த ஒரு வகையான குடும்ப வன்முறையை எதிர்கொண்டாலும், தயங்காமல் மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (9843072080) தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இந்த தகவலை மறக்கமால் SHARE பண்ணுங்க!
News November 27, 2025
திருச்சி: 6 நாட்களுக்கு தடை விதிப்பு

வையம்பட்டி அடுத்த வீரமலைபாளையம் குண்டு சுடும் பயிற்சி தளத்தில், கேரள மாநிலம் ஆலப்புழாவை தலைமையிடமாக கொண்ட இந்தோ-திபெத் ராணுவ வீரர்கள் வரும் நவ.,27-ம் தேதி முதல் டிச.,2-ம் தேதி வரை குண்டு சுடும் பயிற்சி செய்ய திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அனுமதி பெற்றுள்ளனர். அதனடிப்படையில் வீரமலைபாளையம் பகுதியில் நாளை முதல் 6 நாட்களுக்கு பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


