News March 18, 2024

திருச்சியில் ரூ.6 லட்சம் பறிமுதல்

image

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருச்சி அரியமங்கலம் அடுத்துள்ள சஞ்சீவி நகர் ஓயாமரி சாலையில் இன்று தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் கும்பகோணத்திலிருந்து வந்த வாகனத்தை சோதனை செய்தபோது அதிலிருந்து ரூ.4 லட்சம் கணக்கில் வராத தொகையை பறிமுதல் செய்தனர். இன்று காலையில் மட்டும் இதுவரை ரூ.6 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Similar News

News December 8, 2025

திருச்சி: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன் உதவி

image

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் tabcedco.net என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News December 8, 2025

திருச்சி மாவட்டத்தில் நாளை பவர் கட்!

image

திருச்சி மெயின் கார்டு கேட், கம்பரசம்பேட்டை, சிறுகனூர், சிறுகமணி, மணிகண்டம் என மாவட்டத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் திருச்சி காவேரி பாலம், தேவநத்தம், அண்ணா சிலை, நாச்சியார்பாளையம், மணியங்குறிச்சி, கொடியாலம், அந்தநல்லூர் பெட்டவாய்த்தலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை (டிச.9) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

News December 8, 2025

திருச்சி: பேருந்தில் இருந்து கீழே விழுந்து கவலைக்கிடம்

image

அரியலூரில் இருந்து புள்ளம்பாடி வழியாக திருச்சி வந்த அரசு பேருந்தில் பயணம் செய்த அடையாளம் தெரியாத வாலிபர், நேற்று தூக்கத்தில் பேருந்தில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பயணியின் விபரங்கள் தெரியாததால் கல்லக்குடி போலீசார் காயமடைந்தவர் எந்த ஊரை சேர்ந்தவர் என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!