News May 8, 2024
6 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை மழை பெய்யக் கூடும்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மதுரை, விருதுநகர், தென்காசி, திருப்பூர், தேனி, திண்டுக்கல்லில் இரவு 1 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக சில இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Similar News
News March 15, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.14) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 15, 2026
திமுக கூட்டணியில் கட்சிகள் வெளியேறும்: EPS

திமுக கூட்டணியில் 25 கட்சிகள் இருந்தாலும், அவற்றிடம் வலிமை இல்லை என EPS தெரிவித்துள்ளார். அதுவே அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக ஆகிய கட்சிகள் மக்கள் செல்வாக்கு நிறைந்தவை என்றும், அவை நிலையான வாக்கு வங்கியை கொண்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இழுபறியால் சில கட்சிகள் வெளியேறலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
News March 15, 2026
SPORTS 360°: ஹாக்கியில் இந்தியா தோல்வி

*மகளிர் உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஃபைனலில், இங்கிலாந்து 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது *சர்வதேச உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப்பில், இந்திய வீரர் லோகேஷ் சத்யநாதன் 8.21 மீ நீளம் தாண்டி தங்கப்பதக்கத்தை வென்றார் *இண்டியன் வெல்ஸ் ஓபன் ஆடவர் இரட்டையர் அரையிறுதியில், யூகி பாம்ப்ரி-கோரன்சன் இணை தோல்வி *ISL கால்பந்தில் பெங்களூரு-மோகன் பகான் இடையிலான போட்டி கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது.


