News December 5, 2024
6 சடலங்களைக் காணவில்லை.. கிராம மக்கள் மறியல்

தங்க நகைகள், பொருள்கள் காணாமல் போவதை கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் விநோதமாக திண்டுக்கல் வேடசந்தூர் அருகே மயானத்தில் புதைக்கப்பட்ட 6 சடலங்கள் காணாமல் போயுள்ளன. இளைஞர் ஒருவரின் சடலத்தை புதைக்க சென்றபோது, இது தெரிய வரவே கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மயானத்தில் திருட்டுத் தனமாக மண் அள்ளிய கும்பல், தெரியாமல் சடலங்களையும் எடுத்து சென்றது தெரிய வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
Similar News
News November 2, 2025
வீட்டில் நாய் வளர்க்கும் முன் இதை பாருங்க

வீட்டில் நாய் வளர்ப்பது ஒரு அழகான அனுபவமாகும். இதற்கு பொறுப்பும் நேரமும் தேவை. நாயை அன்புடன் கவனித்தால் அது வாழ்நாள் முழுவதும் நம்மை நம்பிக்கையுடன் நேசிக்கும். வீட்டில் நாய் வளர்ப்பதற்கு முன் தெரிந்திருக்க வேண்டிய 8 முக்கிய விஷயங்கள் என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்களுக்கு நாய் பிடிக்குமா? கமெண்ட் பண்ணுங்க.
News November 2, 2025
இரவு 10 மணிக்கு மேல் அந்தப் படம் பார்க்கிறீர்களா?

இரவில் ஹாரர் படங்கள் பார்ப்பதை சிலர் வழக்கமாக வைத்திருப்பர். பயத்துடன் அந்தப் படங்களை பார்த்தாலும், அந்த வழக்கத்தை கைவிட மாட்டார்கள். இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில், தூங்கச் செல்லும் முன்பு, அதாவது 10 மணிக்கு அத்தகைய படத்தைப் பார்ப்பது, மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் அதிகரிக்கச் செய்யும். இது தூக்கத்தை பாதிக்கும் எனத் தெரிய வந்துள்ளது. நீங்கள் இரவில் ஹாரர் படம் பார்ப்பவரா? கமெண்ட் பண்ணுங்க.
News November 2, 2025
வாடகை மனைவி: பரவும் புது கலாசாரம்

தாய்லாந்தில், ‘வாடகை மனைவி’ கலாசாரம் வேகமாக பரவி வருகிறது. பட்டாயா போன்ற சுற்றுலா தலங்களுக்கு வரும் வெளிநாட்டினர், அங்குள்ள பார்கள், நைட்கிளப்கள், ரெஸ்டாரன்ட்ஸில் உள்ளூர் பெண்களை சந்தித்து, பிடித்தால் வாடகைக்கு அமர்த்திக் கொள்கின்றனர். மனைவியாகவோ, கேர்ள் ஃபிரண்டாகவோ கொஞ்ச நாள் இருக்க ₹1 லட்சம் முதல் ₹1 கோடி வரை கட்டணம் வாங்குகிறார்களாம். சில நேரம் வாடகை மனைவி நிரந்தர மனைவியாக மாறுவதும் உண்டாம்.


