News November 6, 2024

6 தளங்களை கொண்ட புதிய ஆட்சியர் அலுவலகம்

image

விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.70.57 கோடி மதிப்பில் புதிய ஆட்சியர் அலுவலகம் கட்ட 2022 ஆம் ஆண்டு அண்ணா பிறந்த நாளன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளதால் ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் வரும் 10 ம் தேதி நேரில் திறந்து வைக்க உள்ளார். 6 தளங்கள், தரைத்தளத்தில் 132 இருக்கைகளுடன் குறைதீர் கூட்ட அரங்கம், 4 லிப்ட் வசதிகள் உள்ளன.

Similar News

News October 22, 2025

சிவகாசி அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி!

image

சிவகாசி அருகே உள்ள செவளூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணசுப்பு மனைவி சின்னம்மாள் (வயது 65). இவர் வீட்டில் உள்ள டியூப்லைட் எரியாத நிலையில் அதனை சரி பார்க்க முயன்ற போது எதிர்பாராமல் மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு விருதுநகர் மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சின்னம்மாளை பரிசோதனை செய்த டாக்டர், சின்னம்மாள் வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

News October 22, 2025

JUST IN விருதுநகர்: 5810 காலியிடங்கள் அறிவிப்பு

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. ஆரம்ப நாள்: 21.10.2025
4. கடைசி தேதி : 20.11.2025
5. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> CLICK HERE.<<>> ஷேர் பண்ணுங்க!

News October 22, 2025

விருதுநகரில் சோகம்… சுவர் இடிந்து விழுந்து கல்லுாரி மாணவி பலி

image

திருத்தங்கல் பழைய வெள்ளையாபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி மகள் பவானி 17. சிவகாசி தனியார் நர்சிங் கல்லுாரியில் படித்து வந்தார். தொடர் மழை பெய்து வருவதாலும் வீரமணியின் வீடு வாறுகாலை ஒட்டி அமைந்துள்ளதாலும் சுவர் பலவீனமடைந்துள்ளது. இருநாட்களுக்கு முன் காலை 10:00 மணிக்கு பவானி வீட்டில் இருந்த போது சுவர் இடிந்து விழுந்ததில் காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.

error: Content is protected !!