News March 25, 2025
6 தலைமுறைகளாக பொங்கல் கொண்டாடாத கிராமம்

தென்காசி மாவட்டம் கடையம் அருகே கேளையாப்பிள்ளையூர் கிராமத்தில், தங்கள் முன்னோர்கள் கூறியதற்கு இணங்க கடந்த 6 தலைமுறைகளுக்கும் மேலாக பொங்கல் கொண்டாடாமல் உள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும், தை மாதம் மூன்றாம் வாரத்தில் உச்சினி மாகாளி அம்மன் கோவிலில் பொங்கல் வைத்து தாங்கள் கொண்டாடுவதாகவும், வீடுகளுக்கு முன் பொங்கல் வைப்பதில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News January 6, 2026
தென்காசி காவலர் பயிற்சி பள்ளி மாணவி கொலை

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி உமா(19) தென்காசி தனியார் காவலர் பயிற்சி பள்ளியில் படித்து வந்தார். இவர் நேற்று அதே கல்லூரியில் பயிலும் ராஜேஷ் (25) என்பவருடன் பைக்கில் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு ராஜேஷ், உமாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின், வெம்பக்கோட்டை போலீசில் நேற்று சரண் அடைந்த ராஜேஷை கழுகுமலை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
News January 6, 2026
தென்காசி வாக்காளர்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

தென்காசி முகாம்களில் புதிய வாக்காளர்கள் சேர்த்திட படிவம் 6 – 22,629, நீக்கல், ஆட்சேபனைக்கான படிவம் 7,236, முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கான படிவம் 8 – 6,818 என எண்ணிக்கையில் பெறப்பட்டுள்ளது. மேலும், 01.01.2026 அன்று 18 வயது நிரம்பிய அனைத்து தகுதியான நபர்களும் 18.01.2026 வரை தங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து கொடுக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
News January 6, 2026
தென்காசி: GPay / PhonePe / Paytm Use பண்றீங்களா? கவனம்!

தென்காசி மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க!


