News December 4, 2024

59,000 வாட்ஸ்-அப் கணக்குகள் முடக்கம்!

image

டிஜிட்டல் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 59,000 வாட்ஸ்-அப் கணக்குகளை இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் முடக்கியுள்ளது. மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமார், “இணைய மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த 9.94 லட்சத்துக்கும் அதிகமான புகார்களின் மூலம் 3,431 கோடி பாதுகாக்கப்பட்டுள்ளது. 1,700க்கும் மேற்பட்ட ஸ்கைப் ஐடிகள் முடக்கப்பட்டுள்ளன” என்றார்.

Similar News

News September 10, 2025

10 ஆண்டுகளுக்கான ஒரு இளைஞரின் மாஸ்டர் பிளான்

image

B.Tech., படித்துவரும் இளைஞர் ஒருவர், 2025 – 2035 வரை தான் என்ன செய்யப்போகிறேன் என்பதை Reddit தளத்தில் பகிர்ந்தது தற்போது வைரலாகிறது. இந்த 10 ஆண்டுகளில் தூக்கத்தில் சமரசம் கிடையாது, பணக்கார பெண்ணை திருமணம் செய்வது, ஜிம் பயிற்சி, ரியல் எஸ்டேட்டில் முதலீடு, விடாமுயற்சியுடன் உழைப்பது, எதையும் விரிவாக படிப்பது ஆகியவை உள்ளன. இவை சரியானவையா? இதில் நீங்கள் எதையாவது பின்பற்றுகிறீர்களா?

News September 10, 2025

ஐபோன் 16 சீரிஸ்களின் விலையை குறைத்த ஆப்பிள்

image

ஐபோன் 17 சீரிஸ்களை ஆப்பிள் நிறுவனம் நேற்று அறிமுகம் செய்த நிலையில், இந்தியாவில் ஐபோன் 16 சீரிஸ்களின் விலையை ₹10,000 குறைத்துள்ளது. முன்பு, ஐபோன் 16 மாடல் ₹79,000-க்கு விற்கப்பட்ட நிலையில், அது தற்போது ₹69,000 ஆக குறைந்துள்ளது. அதேபோல், 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 16+ மாடல் ₹79,900 (முன்பு ₹89,900) மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் ஐபோன் 16+ மாடல் ₹89,900 (முன்பு ₹99,900) விற்கப்படுகிறது.

News September 10, 2025

விஜயகாந்த் வீட்டில் துயரம்.. பிரேமலதா கண்ணீர் அஞ்சலி

image

விஜயகாந்தின் உடன் பிறந்த சகோதரி விஜயலெட்சுமி உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவரது உடலுக்கு மாலை அணிவித்து பிரேமலதா, விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். மேலும், அவரது உடலுக்கு முக்கிய அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு, சொந்த ஊரான மதுரையில் இன்று மாலை இறுதிச் சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!