News December 31, 2024
59 வினாடிகளில் 32 வகையான மேஜிக்

மஞ்சம்பட்டியை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மகள் 10 வயதான இவர் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 5 ம் வகுப்பு படித்து வருகிறார். தந்தை மேஜிக் கலைஞர் என்பதால் ஆரம்பத்தில் இருந்தே சிறுமிக்கு மேஜிக் கலை மீது ஆர்வம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இளம் வயதிலேயே கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வத்ததில் 59 வினாடிகளில் 32 வகையான மேஜிக் செய்து அசத்தியுள்ளார்.
Similar News
News November 24, 2025
திருச்சி: மின் நிறுத்தம் வாபஸ் – கனமழை எதிரொலி

திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, தியாகேசர் ஆலை, விடத்திலாம்பட்டி, பன்னாங்கொம்பு துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட 81 கிராமங்களுக்கு மின் நிறுத்தம் செய்யப்படுவதாக செயற்பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்நிலையில் மழைகாரணமாக இன்று மின் நிறுத்தம் செய்யப்படாது என மறு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
News November 24, 2025
BREAKING: திருச்சி மாவட்டத்திற்கு இன்று விடுமுறை

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் திருச்சி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வரும் காரணத்தால் திருச்சி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (நவ.24) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
News November 24, 2025
திருச்சி: சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ஆமைகள்

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஸ்கூட் விமானத்தில் வந்த பயணிகள் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, பயணி ஒருவர் தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட 2477 அரியவகை ஆமைகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக நாகையைச் சேர்ந்த பயணியை கைது செய்ததுடன், அவர் கடத்திவந்த ஆமைகளை பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


