News March 31, 2025
உ.பி.யில் 582 நீதிபதிகள் திடீர் பணியிட மாற்றம்

உத்தரப்பிரதேசத்தில் ஒரே நாளில் 582 நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் 236 கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதிகள், 346 சிவில் நீதிபதிகளும் மாற்றப்பட்டனர். அதிகபட்சமாக கான்பூர் மாவட்டத்தில் இருந்து 13 நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய நீதிமன்றங்களில் உடனடியாக பணியைத் தொடங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News January 17, 2026
விஜய் கட்சியில் இணைந்த அடுத்த அதிமுக தலைவர்

அதிமுக மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட EX MLA புரசை V.S.பாபு தவெகவில் இணைந்துள்ளார். 2008 காலக்கட்டத்தில் திமுக மா.செ.வான புரசை வி.எஸ்.பாபு, அதிமுக மா.செ.வாக இருந்த சேகர்பாபுவை எதிர்த்து அரசியல் செய்தவர். 2011-ல் சேகர்பாபு திமுகவில் இணைந்ததால், வி.எஸ்.பாபு அதிமுகவுக்கு தாவினார். தற்போது மா.செ பதவி பறிக்கப்பட்டதால், செங்கோட்டையனுக்கு ஆதரவாக தவெகவில் ஐக்கியமாகி இருக்கிறார்.
News January 17, 2026
திங்கள்கிழமை.. வந்தாச்சு மகிழ்ச்சியான செய்தி

₹3,000 அடங்கிய தமிழக அரசின் பொங்கல் பரிசை இதுவரை 2.15 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பெற்றுள்ளனர். ஆனால் பொங்கலுக்காக ஊருக்கு சென்றவர்கள் பொங்கல் பரிசை பெற முடியாமல் உள்ளனர். இந்நிலையில், திங்கள்கிழமை (ஜன.19) முதல் விடுபட்டவர்களுக்கு ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் எனவும், மறுஅறிவிப்பு வரும் வரை பொங்கல் பரிசு விநியோகம் தொடரும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News January 17, 2026
ஊருக்கே ஊற்றிக் கொடுத்த திமுக அரசு: நயினார்

பொங்கல் பண்டிகையில் ₹518 கோடிக்கு மது விற்பனையானதை சுட்டிக்காட்டி, உழவர் திருநாளன்று கூட உறுத்தாமல் ஊருக்கே ஊற்றிக் கொடுத்துள்ளது அறிவாலய அரசு என்று நயினார் விமர்சித்துள்ளார். பொங்கலுக்கு ₹3000 கொடுக்கிறோம் என ஊரெல்லாம் தம்பட்டம் அடித்துவிட்டு, அந்தப் பணத்தை டாஸ்மாக் வாயிலாக வசூலித்துள்ளது திமுக அரசு என சாடிய அவர், இதுபோன்ற ஒரு அரசு இனி தப்பித்தவறி கூட தமிழகத்தை ஆளக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.


