News September 23, 2024
565 மனுக்களை பெற்று கொண்ட தஞ்சை ஆட்சியர்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் பட்டா கல்வி கடன் முதியோர் உதவித்தொகை குடும்ப அட்டை மாற்றுத்திறனாளிகள் உதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 565 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பல்வேறு துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News August 14, 2025
கும்பகோணத்தில் மகாமகம் பெருவிழா முன்னிட்டு ஆலோசனை கூட்டம்

கோவில் நகரமான குடந்தையில் நடைபெற இருக்கும் புகழ் பெற்ற விழாவான மகாமகம் திருவிழா 2028 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. அந்த விழாவிற்கு தேவையான முன்னேறுபாடுகள் பற்றி இன்று (ஆகஸ்ட் 13) கும்பகோணம் துணை ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனை கலெக்டர். பிரியங்கா பங்கஜம் அவர்கள் தலைமை தாங்கினார். இதில் மக்களின் பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்துவது போன்ற பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றது.
News August 13, 2025
விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் கைது

தஞ்சாவூர் மாதாகோட்டையில் இருசக்கர வாகனம் மீது உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த கார் மோதியதில் தஞ்சை சேர்ந்த அறிவழகன், பவ்யா ஸ்ரீ, தேஜா ஸ்ரீ ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் முகமது ரியாஸ் (32) என்பவரை தமிழ் பல்கலைக்கழக காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News August 13, 2025
தஞ்சை: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா? Check பண்ணுங்க!

தஞ்சை மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. இந்த தளத்தில் உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து <