News April 8, 2025
56 கிலோ கஞ்சா பண்டல் மற்றும் கார் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தென் கடல் அய்யனார் கோயில் கடற்கரையில் கேட்பாரற்று கிடந்த கஞ்சா பண்டல்களை மண்டபம் சுங்கத்துறையினர் இன்று காலை கைப்பற்றினர். அதில் தலா 2 கிலோ வீதம் 28 பண்டல்களில் 56 கிலோ கஞ்சா இருந்தது. கஞ்சா பண்டல்களை பறிமுதல் செய்து, அங்கு நின்ற காரை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். கைப்பற்றிய கஞ்சாவின் மதிப்பு ரூ.5.50 லட்சம் இருக்கலாம் என சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.
Similar News
News November 16, 2025
ராமநாதபுரம்: 10th தகுதி.. எய்ம்ஸ்-ல் வேலை ரெடி!

ராமநாதபுரம் மக்களே, எய்ம்ஸ் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <
News November 16, 2025
தொண்டியில் கடல் சீற்றம்; கரை தாண்டிய கடல்நீர்

தொண்டி, (நவ.15)ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் பருவ நிலை மாற்றத்தால் கடல் கரை தாண்டி காணப்பட்டது. தொண்டி கடல் பகுதியானது எப்பொழுதும் அதிகமான அலைகள் இல்லாமல் அமைதியாக காணப்படும். ஆனால் கடந்த இரு தினங்களாக வாடை காற்று அதிகமாகி கடல் சீற்றத்துடன் கடலில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வழக்கத்தை விட கரையைத்தாண்டி கடல் தண்ணீர் அலைகளுடன் காணப்பட்டது. நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
News November 16, 2025
இராமநாதபுரம் அரசு பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது

2024-25 சிறந்த பள்ளிக்கான கேடயம் வழங்கும் நிகழ்வு காரைக்குடி அழகப்பா மாதிரி பள்ளியில் நடைபெற்றது. துணை முதலமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், பள்ளிக்கல்வி இயக்குனர் தொடக்கக் கல்வி இயக்குனர் கலந்துகொண்டு மாவட்ட வாரியாக கேடயங்களை வழங்கினர். அதில் இராமநாதபுரம் பேராவூர் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கான கேடயத்தை தலைமை ஆசிரியை காளீஸ்வரி பெற்றுக்கொண்டார்.


