News April 8, 2025
56 கிலோ கஞ்சா பண்டல் மற்றும் கார் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தென் கடல் அய்யனார் கோயில் கடற்கரையில் கேட்பாரற்று கிடந்த கஞ்சா பண்டல்களை மண்டபம் சுங்கத்துறையினர் இன்று காலை கைப்பற்றினர். அதில் தலா 2 கிலோ வீதம் 28 பண்டல்களில் 56 கிலோ கஞ்சா இருந்தது. கஞ்சா பண்டல்களை பறிமுதல் செய்து, அங்கு நின்ற காரை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். கைப்பற்றிய கஞ்சாவின் மதிப்பு ரூ.5.50 லட்சம் இருக்கலாம் என சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.
Similar News
News November 6, 2025
ராம்நாடு: இனி RTO ஆபீஸ்க்கு அலைய வேண்டாம்.!

ராமநாதபுரம் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <
News November 6, 2025
ராமநாதபுரம் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஜீவா நகர் நெசவாளர் பயிற்சி மையத்தில் இளைஞர்களுக்கான நெசவாளர் பயிற்சி முகாம் துவங்கப்பட்டுள்ளது. இதில் 18 வயது முதல் 28 வயது வரையிலான ஆண், பெண் நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் பயிற்சி முடிந்தவுடன் ஊக்கத்தொகை, திறன் மேம்பாட்டு மையம் சார்பில் சான்றிதழ் வழங்கப்படும் என கைத்தறி உதவி இயக்குனர் சேரன் தெரிவித்தார்.
News November 6, 2025
ராம்நாடு: போட்டி தேர்வர்களுக்கு குட் நியூஸ்..!

தமிழக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக, மென் பாடக் குறிப்புகள் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இனி TNPSC, TNUSRB, RRB மற்றும் TRB போன்ற அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டம் தொடர்பான சந்தேகங்களை இந்த லிங்கை<


