News April 8, 2025
56 கிலோ கஞ்சா பண்டல் மற்றும் கார் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தென் கடல் அய்யனார் கோயில் கடற்கரையில் கேட்பாரற்று கிடந்த கஞ்சா பண்டல்களை மண்டபம் சுங்கத்துறையினர் இன்று காலை கைப்பற்றினர். அதில் தலா 2 கிலோ வீதம் 28 பண்டல்களில் 56 கிலோ கஞ்சா இருந்தது. கஞ்சா பண்டல்களை பறிமுதல் செய்து, அங்கு நின்ற காரை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். கைப்பற்றிய கஞ்சாவின் மதிப்பு ரூ.5.50 லட்சம் இருக்கலாம் என சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.
Similar News
News October 19, 2025
ராம்நாடு: கல்விக்கடன் முகாம் – ஆட்சியர் அறிவிப்பு

இராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குறைதீர் கூட்ட அரங்கில் 2025- 2026ம் ஆண்டிற்கான மாணவர்களுக்கு உயர்கல்வி கடன் விண்ணப்பிக்கும் முகாம் வருகின்ற அக்- 22-ம் தேதி காலை 10:30 மணியளவில் நடைப்பெற உள்ளது. இதில் உயர்கல்விக்கு தகுதி பெற்றவருக்கு கல்விக்கடன் வழங்குதல் மற்றும் கல்விக்கடன் பற்றி வழிகாட்டுதல் முதலியவற்றை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.SHARE பண்ணுங்க கண்டிப்பாக உதவும்.
News October 19, 2025
ராமநாதபுரம்: காவல்துறை இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

ராமநாதபுரம் மாவட்டம் இரவு ரோந்து பணிக்கு ராமநாதபுரம், முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி, ராமேஸ்வரம், கீழக்கரை மற்றும் திருவாடானை ஆகிய பகுதிகளில் இன்று (18.10.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம்.
News October 18, 2025
ராம்நாடு: தீபாவளி லீவில் இதை மிஸ் பண்ணாதீங்க…

1.TNSTCல் 1,588 அப்ரண்டீஸ், https://nats.education.gov.in/ -ல் அக். 18க்குள் விண்ணப்பிக்கவும்
2.NLCல் 1,101 அப்ரண்டீஸ், https://www.nlcindia.in/website/en/ -ல் அக். 21க்குள் விண்ணபிக்கவும்
3.IITல் உள்ள 37 காலியிடங்கள், https://recruit.iitm.ac.in/ -ல் அக். 26க்குள் விண்ணப்பிக்கவும்.
4.பரோடா வங்கி 50 காலியிடங்கள், https://bankofbaroda.bank.in/ -ல் நவ. 30க்குள் விண்ணப்பிக்கவும். SHARE