News March 16, 2024
தேர்தலில் பயன்படுத்தப்படும் 55 லட்சம் EVM இயந்திரங்கள்

மக்களவைத் தேர்தலில் 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பயன்படுத்தப்படவுள்ளன. இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” 10.5 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. 1.5 கோடி தேர்தல் அதிகாரிகள், பாதுகாப்பு ஊழியர்கள் பணியில் ஈடுபடுகின்றனர். 55 லட்சம் இவிஎம் இயந்திரங்கள், 4 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன” என்றார்.
Similar News
News March 1, 2026
மனைவியால் விஜய்க்கு இப்படியொரு நிலையா?

ஆட்சியில் பங்கு மற்றும் 40+1 தொகுதிகளை கேட்டு திமுகவுக்கு அழுத்தம் கொடுத்த அதே நேரத்தில், தவெகவுடன் காங்., கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது. இதற்கிடையில் விஜய் மனைவி சங்கீதா விவகாரத்து கேட்டு வழக்குத் தொடுத்தார். இந்த செய்தி வெளியான பின்னரே தவெகவுடன் கூட்டணி அமைக்கும் முடிவில் இருந்து பின் வாங்கிய <<19261440>>காங்.,<<>> திமுகவுடனும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை தொடங்கியதாம்.
News March 1, 2026
திமுக கூட்டணி.. ஒரே நாளில் மாறியது

மனிதநேய மக்கள் கட்சி, SDPI, மஜக, முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை ஆகிய கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாற்றத்திற்கு ஒப்புக்கொண்டதால், வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என திமுக தலைமை கருதுகிறதாம். அதேநேரம், 2021 தேர்தலைப் போன்றே மதிமுக, தவாக, கொமதேக கட்சிகளை உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடுமாறு திமுக வலியுறுத்தியுள்ளதாம்.
News March 1, 2026
மூண்ட போர்.. இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

ஈரான் – USA போரால், இவ்விரு நாடுகளுடனும் நட்புறவில் உள்ள இந்தியா 4 முக்கிய பிரச்னைகளைச் சந்திக்கவுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். கச்சா எண்ணெய் உயர்வால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, தங்கம் விலை அதிகரிப்பு, ஈரானில் இந்திய முதலீடு செய்துள்ள சபாஹர் துறைமுகத் திட்டம் & வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியர்களின் பாதுகாப்பு ஆகிய பாதிப்புகளை இந்தியா எப்படி சமாளிக்க போகிறது என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.


