News August 15, 2025

55 ஆண்டுகள்.. மரணத்திலும் இணைபிரியா தூத்துக்குடி தம்பதி

image

சாத்தான்குளம் அருகே உள்ள போலையாபுரத்தை சேர்ந்தவர் பச்சைப்பூதர்மராஜ் (83) இவரது மனைவி தங்க புஷ்பம் (73). திருமணம் ஆகி 55 ஆண்டுகள் ஆகின்றன. தங்க புஷ்பம் இன்று காலை உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவர் இறந்த சில மணி நேரங்களில் உடல்நலக்குறைவு காரணமாக பச்சைப்பூதர்மராஜ் இறந்தார். கணவன் மனைவி ஒரே நாளில் இறந்தது அனைவரையும் மீள துயரத்தில் ஆழ்தியுள்ளது.

Similar News

News August 16, 2025

தூத்துக்குடி இரவு ரோந்து போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News August 15, 2025

தூத்துக்குடி: 10th போதும்.. ரூ.63,000 சம்பளத்தில் அரசு வேலை

image

இந்திய கடற்படையில், டிரேட்ஸ்மேன் பணிக்கு 1,226 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்டுகிறது. 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். 13.08.2025 முதல் 02.09.2025ம் தேதிக்குள் இந்த <>லிங்கை கிளிக் <<>>செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க.

News August 15, 2025

தூத்துக்குடி: கோவில் அர்ச்சகர் வீட்டில் 107 பவுன் நகை கொள்ளை

image

குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் அர்ச்சகராக இருந்த குமார் பட்டர், கடந்த மாதம் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். இவரது மனைவி பிரியா, உறவினர் வீட்டில் தங்கியிருந்து, ஆகஸ்ட் 13 அன்று வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 107 பவுன் தங்க நகைகள், வெள்ளி, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. குலசேகரபட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!