News June 25, 2024

55 போலீசார் பணியிட மாற்றம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், ராணிப்பேட்டை என 2 சப்-டிவிஷன்கள் உள்ளன. இதில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், காவலர்கள் என மொத்தம் 55 பேரை பணியிட மாற்றம் செய்து ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர்கள் பெரும்பாலானவர்கள் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக வேறு ஸ்டேஷனிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்கள்.

Similar News

News July 11, 2025

உலக இளைஞர் திறன் தின நாள் கொண்டாடப்படும்

image

ராணிப்பேட்டை மாவட்டம் ஜூலை 15 வரை தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் உலக இளைஞர் திறன் தின நாள் மாவட்டம் முழுவதும் கொண்டாட உள்ளதாக ஆட்சியர் ஜெ.யூ. சந்திரகலா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரத்தை இந்த விழிப்புணர்வு வாரமாக அனுசரித்து கொண்டாட உள்ளது என்றும் தெரிவித்தார்.

News July 11, 2025

குரூப் 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…

image

▶ராணிப்பேட்டையில் நாளை (ஜூலை 12) குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.
▶தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
▶ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
▶கருப்பு மை கொண்ட பேனா மட்டுமே அனுமதி.
▶காலை 9 மணிக்குள்ளேயே தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
▶வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய கூடாது.
தேர்வு எழுதும் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News July 11, 2025

காவல்துறை சார்பாக உலக மக்கள் தொகை குறித்து

image

ராணிப்பேட்டை காவல்துறை சார்பாக இன்று சமூகவலைதளத்தில் வெளியிடப்பட்டது என்னவென்றல் இன்று உலக மக்கள் தொகை நாள், உலக மக்கள் தொகை நாள் என்பது ஆண்டுதோறும் ஜூலை 11 மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும், ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது. 1987ஆம் ஆண்டில் இதே நாளிலேயே உலக மக்கள் தொகை ஐந்து பில்லியனைத் தாண்டியது.

error: Content is protected !!