News March 16, 2024
தூத்துக்குடி மாவட்டத்தில் 54 பறக்கும் படை

தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு 54 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு ஒளிப்பதிவாளர், 5 அலுவலர்கள் கொண்டு 3 சுற்றுகளாக பறக்கும் படை செயல்படும் என ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார். மேலும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு மூன்று பறக்கும் படை நியமனம் செய்யப்பட்டுள்ளது.
Similar News
News November 13, 2025
திருச்செந்தூர் நெல்லை பயணிகள் ரயில் இன்று முதல் ரத்து

நெல்லை சந்திப்பு ஆறாவது பிளாட்பார்மில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு மாலை நான்கு முப்பது மணிக்கு புறப்படும் பயணிகள் ரயிலும் திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு காலை 11 40 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயிலும் இன்று முதல் 14, 15, 17, 19, 20, 21, 22, 24 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 13, 2025
தூத்துக்குடி வந்த சட்டமன்ற இணை செயலாளர் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டத்திற்கு சட்டமன்ற பொது கணக்கு குழு சார்பில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஆய்வுக்காக வந்திருந்த தமிழக சட்டமன்ற இணை செயலாளர் ரமேஷ் (57) என்பவர் நேற்று ஆய்வு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
News November 13, 2025
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளி முகாம்கள் ரத்து

தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் முகாம் வரும் 18ம் தேதி வரை அந்தந்த அலுவலகங்களில் நடைபெற இருந்தது. இந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெறவிருந்த முகாம்கள் ஒத்திவைக்கப்படுவதாக கலெக்டர் இளம் பகவத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


