News August 12, 2024

526 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்

image

வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் பொதுமக்களின் குறைகளை கேட்டு அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அதிகாரிகள் முனைப்புடன் செயலாற்ற வேண்டுமென கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Similar News

News March 11, 2026

திருவள்ளூர் மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 12.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News March 10, 2026

திருவள்ளூரில் வாடகை வீட்டில் ஹவுஸ் ஓனர் பிரச்சனையா?

image

வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை என வாடகை வீட்டில் குடியிருப்போர் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்க ஹவுஸ் ஓனர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு தந்தாலோ 1800 599 01234 என்ற எண்ணில் புகார் செய்யலாம் அல்லது உங்க பகுதி வாடகை அதிகாரியிடம் புகார் செய்யலாம் . ஷேர் பண்ணுங்க.

News March 10, 2026

சித்தம்பாக்கம் ஏரியில் மண் குவாரிக்கு மக்கள் எதிர்ப்பு!

image

திருவள்ளூர்: சித்தம்பாக்கம் ஏரியில் சவுடு மண் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஏரி சுற்றுவட்டாரத்தில் மண் அகழ்வு மேற்கொள்ளப்பட்டால் நீர்நிலைக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், விவசாயம் மற்றும் குடிநீர் வளம் குறையும் என்றும் கூறி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

error: Content is protected !!