News February 18, 2025
52 மாணவர்களிடம் ரூ.4.42 லட்சம் வரை மோசடி

தேவகோட்டை அழகாபுரியை சேர்ந்த அலெக்சாண்டர் கல்வி நிறுவனம் நடத்தி வருவதாக கூறி +2 மாணவர்களை குறைந்த கட்டணத்தில் இஞ்ஜினியர் கல்லூரியில் சேர்த்து விடுவதாக கூறி ஒவ்வொருவரிடமும் ரூ.10000 வரை பெற்று சில மானவர்களின் அசல் சான்றிதழைகொடுக்காமால் தலைமறைவாகியுள்ளார்.இதுகுறித்து அளித்த புகாரின் படி அலெக்சாண்டரை கைது செய்து விசாரித்ததில் அவர் 52 மாணவர்களிடம் ரூ.4.42 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
Similar News
News October 16, 2025
அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டம், டாக்டர்.அம்பேத்கர் விருது பெற விரும்பும் தகுதிவாய்ந்த நபர்கள், சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தினை உரிய ஆவணங்களுடன் அணுகி, வருகின்ற 28,11,2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தினை நேரில் சமர்ப்பித்தல் வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பொற்கொடி தெரிவித்துள்ளார்.
News October 16, 2025
சிவகங்கை: G.H.ல் கேண்டீன் வைக்க விண்ணப்பிக்கலாம்

காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிறுதானிய சிற்றுண்டி உணவகம் அமைப்பதற்கு, குறிப்பிட்டுள்ள தகுதிகளுடைய மகளிர் சுய உதவிக்குழுக்கள்/கூட்டமைப்புகள்/ தொகுப்புகள் விண்ணப்பிக்கலாம். சுய விண்ணப்பங்களை திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சிவகங்கை என்ற முகவரியில் 22ஆம் தேதிக்குள் நேரில் சமர்ப்பித்திடல் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News October 16, 2025
சிவகங்கை: விவசாயியை தாக்கி கொலை செய்தவர் கைது

சிவகங்கை அருகே செவல்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி சந்திரன் என்பவர். நேற்று முன்தினம் இவரை தமறாக்கி கிராமத்தை சேர்ந்த பிரபுகுமார் மற்றும் அவரது நண்பர் ஒருவர் சேர்ந்து கூட்டுறவுபட்டி விலக்கு அருகே வைத்து தாக்கியதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சந்திரன் உயிரிழந்தார். இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீசில் புகார் அளித்து, வழக்குப்பதிவு செய்து பிரபுகுமார் மற்றும் அவரது நண்பரை கைது செய்தனர்.