News February 18, 2025

52 மாணவர்களிடம் ரூ.4.42 லட்சம் வரை மோசடி

image

தேவகோட்டை அழகாபுரியை சேர்ந்த அலெக்சாண்டர் கல்வி நிறுவனம் நடத்தி வருவதாக கூறி +2 மாணவர்களை குறைந்த கட்டணத்தில் இஞ்ஜினியர் கல்லூரியில் சேர்த்து விடுவதாக கூறி ஒவ்வொருவரிடமும் ரூ.10000 வரை பெற்று சில மானவர்களின் அசல் சான்றிதழைகொடுக்காமால் தலைமறைவாகியுள்ளார்.இதுகுறித்து அளித்த புகாரின் படி அலெக்சாண்டரை கைது செய்து விசாரித்ததில் அவர் 52 மாணவர்களிடம் ரூ.4.42 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

Similar News

News November 14, 2025

காரைக்குடி வருகிறார் துணை முதல்வர்

image

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று (நவ.14) நடைபெறும் குழந்தைகள் தின விழா, பிளஸ் 1 மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்கிறார். மேலும் மாநிலம் முழுவதும் ரூ.246 கோடியில் 5.34 லட்சம் மாணவர்களுக்கு சைக்கிள்கள் இன்று வழங்கப்படுகின்றது.

News November 14, 2025

மானாமதுரை டூ திருப்பதி இனி சுலபமா போகலாம்

image

மானாமதுரை வழியாக நவம்பர் -18 முதல், டிசம்பர்- 31ஆம் தேதி வரை
இராமேஸ்வரத்திலிருந்து, திருப்பதிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மாலை 4:30 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து மானாமதுரை வழியாக திருப்பதி செல்லும். சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் மானாமதுரை ரயில் நிலையத்திலிருந்து இந்த ரயிலில் திருப்பதி பயணிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 14, 2025

சிவகங்கை அருகே கொடூரம் 18 வயது இளைஞர் பரிதாப பலி

image

சிவகங்கை அதப்படக்கி பகுதியை சேர்ந்த மணிகண்டன், சமயபிரபு உள்ளிட்ட இரு மாணவர்கள் கோவை செல்ல டூ–வீலரில் சிவகங்கை பேருந்து நிலையத்திற்கு புறப்பட்டனர். பையூர் அருகே தொண்டி ரோடு நான்கு ரோடு சந்திப்பில் திரும்பியபோது மதுரையிலிருந்து வந்த சரக்கு வாகனம் மோதி இருவரும் காயமடைந்தனர். சிவகங்கை அரசு மருத்துவமனையில் சமயபிரபு உயிரிழந்தார். லாரி டிரைவர் நிக்சன் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

error: Content is protected !!