News February 18, 2025
5,18,783 விவசாயிகள் பயனடையும் வகையில் நிவாரணம்

ஃபெஞ்சல் புயலால் சேதமடைந்த பயிர்கள் குறித்து முறையாக கணக்கெடுக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், உள்ளிட்ட 18 மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளான 3.23 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு மொத்தம் 5,18,783 விவசாயிகள் பயனடையும் வகையில் 498.80 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் உத்தரவிடப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News April 21, 2025
டாட்டா ஏசி நேருக்கு நேர் மோதி விபத்து

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு கிராமத்தில் இருந்து சங்கராபுரம் நோக்கி சென்ற டாட்டா ஏசி சரக்கு வாகனமும், எதிரே வந்த பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரின் டாட்டா ஏசி வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளனாது. இந்த விபத்தில் ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. மற்றொருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
News April 21, 2025
காயங்களுடன் முதியவர் மரணம் – பின்னணி என்ன?

தியாகதுருகம் அடுத்த பெரியமாம்பட்டு ஏரியில் முதியவர் ஒருவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் மலர்விழி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.அப்போது, இறந்தவர் சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி சேர்ந்த காந்தி,(70) என தெரியவந்தது. அவர் பெரியமாம்பட்டில் உள்ள அவரது மகள் விஜயாவை பார்க்க சென்ற நிலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் இறந்தார்.
News April 20, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்(20.4.2025 ) இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.