News October 30, 2025

சத்தீஸ்கரில் 51 மாவோயிஸ்டுகள் சரண்

image

சத்தீஸ்கர் பிஜப்பூர் மாவட்டத்தில், 9 பெண்கள் உட்பட 51 மாவோயிஸ்டுகள் சரணடைந்தனர். இவர்களில் 20 பேரின் தலைக்கு ₹66 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. 2026 மார்ச் 31-ம் தேதிக்குள் இந்தியாவில் நக்சலைட்டுகளை ஒழிக்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் எதிரொலியாக, சத்தீஸ்கரில் டிச.2023 முதல் தற்போது வரை 2,250 பேருக்கும் மேல் சரணடைந்துள்ளனர்.

Similar News

News October 30, 2025

வரலாற்றில் முதல் இந்திய பெண்.. புனே பெண் சாதனை!

image

சர்வதேச மோட்டார்ஷிப் சாம்பியன்ஷிப்பில் Ferrari காரை ஓட்டும் முதல் இந்திய பெண் என்ற பெருமையை புனேவை சேர்ந்த டயானா பூண்டோல்(32) நவம்பர் 2025 முதல் ஜனவரி 2026 வரை Middle East-ல் நடைபெறும் Ferrari Club Challenge தொடரில் அவர் பங்கேற்கிறார். Ex- ஸ்கூல் டீச்சரான டயானா, 2024-ல் the MRF Saloon Cars Championship தொடரில், நாட்டின் முன்னணி ஆண் ரேஸர்களை தோற்கடித்து பட்டம் வென்றிருந்தார்.

News October 30, 2025

33 நாள்களாக நெல் கொள்முதல் இல்லை: அன்புமணி

image

நெல் கொள்முதல் குறித்து அரசு பதிலளித்தாலும், எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், வட மாவட்டங்களில் 33 நாள்களாக நெல் கொள்முதல் நடைபெறவில்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கொள்முதல் சிறப்பாக நடைபெறுவதாக பேசும் CM-க்கு, இதுபற்றி தெரியவில்லையா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வட மாவட்டங்கள் வேறு பகுதியில் இருப்பதாக CM நினைக்கிறார் போல என்றும் விமர்சித்துள்ளார்.

News October 30, 2025

இளம் கிரிக்கெட் வீரர் மரணம்

image

ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் பாலால் அடிபட்ட இளம் கிரிக்கெட் வீரர் உயிரிழந்துள்ளார். மெல்போர்னில் உள்ள Ferntree Gully கிரிக்கெட் கிளப்பில் பென் ஆஸ்டின்(17), பயிற்சியில் ஈடுபட்டபோது, பவுலிங் மெஷின் வீசிய பால் அவரின் கழுத்தில் வேகமாக அடித்துள்ளது. ஆஸ்டின் ஹெல்மெட் அணிந்திருந்தபோதும், பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், ஆஸ்டின் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

error: Content is protected !!