News March 3, 2026
5,000 பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 5,000 அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ₹15,000 வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு, தாய் மொழியில் பேச்சு திறன் அடிப்படையில் இப்பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 4-ம் தேதிக்குள் இந்த <
Similar News
News March 3, 2026
நெல்லை: பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே? – விஜய்

நாங்குநேரி அருகே 9 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களால் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்து 5 பேர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைவெறித் தாக்குதலை கண்டித்து, உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு அனுதாபம் தெரிவிக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளதாகவும், திமுக ஆட்சியை மக்கள் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நிராகரிப்பார்கள் எனவும் தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு.
News March 3, 2026
திமுக ஆட்சி தூக்கி எறியப்படுவது உறுதி: விஜய்

நெல்லையில் 9 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் டாப் மாநிலத்தில்
சட்டம் ஒழுங்கு டிஜிபி எங்கே என கேள்வியெழுப்பியுள்ள அவர், போதை கும்பல் சுதந்திரமாக வன்முறை நிகழ்த்த இடம் தந்த பொறுப்புமிக்க ஆட்சி இதுதானா என்றும் கேட்டுள்ளார். மக்கள் நலனை பற்றி யோசிக்காத திமுக ஆட்சி, தேர்தலில் தூக்கி எறியப்படுவது உறுதி என்றும் சூளுரைத்துள்ளார்.
News March 3, 2026
3-ம் உலக போர் மூளுமா?

ஈரானுக்கும் எதிராக பிரச்னையில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் US- இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் சீனா, ஈரானுக்கு மறைமுகமாக உதவுவதாக கூறப்படுகிறது. மத்திய கிழக்கில் நிலவும் பிரச்னை ஆசியா, ஐரோப்பா நாடுகளுக்கும் பரவி 3-ம் உலக போர் மூளுமா என்ற விவாதம் தொடங்கியுள்ளது. போரால் பெரும் உயிரிழப்புகளும், நீண்டகால பொருளாதார பாதிப்புகளும் ஏற்படும் என்பதால் மக்கள் பீதியில் உள்ளனர்.


