News August 8, 2024
5,000 விதைப்பந்துகளை வழங்கிய பள்ளி மாணவர்கள்

வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ள மலைகளில் 5 லட்சம் விதைப்பந்துகள் தூவ தயார் செய்யும் பணியில் சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் வேலூர் எழில் நகர் வேலம்மாள் CBSE பள்ளி மாணவர்கள் விதைகளை சேகரித்து பள்ளியின் முதல்வர் தலைமையில் 5,000 விதைகளை சமூக ஆர்வலர் தினேஷ் சரவணனிடம் வழங்கினர்.
Similar News
News November 28, 2025
பள்ளி மாணவர்களை வழி அனுப்பி வைத்த கலெக்டர்!

சென்னையில் நடைபெறும் ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை 2025 போட்டிகளை பார்வையிட வேலூர் மாவட்டத்திலிருந்து செல்லும் பள்ளி மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (நவம்பர் 28) வாழ்த்தி, வழியனுப்பி வைத்தார். இந்நிகழ்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரேமலதா, மாவட்ட விளையாட்டு அலுவலர் சுப்பிரமணி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சரஸ்வதி உட்பட பலர் உடனிருந்தனர்.
News November 28, 2025
வேலூர்: சமூக நீதி & மனித உரிமை விழிப்புணர்வு!

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ. மயில்வாகனன் தலைமையில் இன்று (நவ.28) பீஞ்சமந்தை, ஜார்தான் கொள்ளை, பாலம்பட்டு பகுதிகளைச் சேர்ந்த 48 கிராம மக்களுக்கும் மாணவர்களுக்கும் சமூக நீதி மற்றும் மனித உரிமை விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. 400 பேருக்கு அறுசுவை விருந்தும் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு குறித்து அவர் ஊக்கமளித்தார்.
News November 28, 2025
வேலூர் மாவட்டத்தில் கலை திருவிழா கலெக்டர் தகவல்!

கலை பண்பாட்டுத் துறையின் மூலம் நாட்டுப்புற கலைகளையும், கலைஞர்களையும் பேணி வளர்ப்பதற்கும், தமிழ் மக்களின் பண்பாட்டு விழுமியங்களை கொண்டாடும் விதமாக வேலூர் கோட்டை மைதானத்தில் நாளை நவ.29 மற்றும் 30 ஆகிய நாட்களில் நடைபெற உள்ள வேலூர் சங்கமம்-நம்ம ஊரு திருவிழா நடைபெற உள்ளது . இதில் கலைநிகழ்ச்சிகள் பொதுமக்கள் கண்டுகளிக்கலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


