News August 8, 2024
5,000 விதைப்பந்துகளை வழங்கிய பள்ளி மாணவர்கள்

வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ள மலைகளில் 5 லட்சம் விதைப்பந்துகள் தூவ தயார் செய்யும் பணியில் சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் வேலூர் எழில் நகர் வேலம்மாள் CBSE பள்ளி மாணவர்கள் விதைகளை சேகரித்து பள்ளியின் முதல்வர் தலைமையில் 5,000 விதைகளை சமூக ஆர்வலர் தினேஷ் சரவணனிடம் வழங்கினர்.
Similar News
News November 12, 2025
வேலூர் கூடுதல் விலைக்கு மது விற்பனை பெண் கைது

வேலூர் ஓல்டு டவுன் பகுதியில் மதுபானம் கள்ளத்தனமாக விற்பனை செய்வதாக வேலூர் தெற்கு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கோதாவரி (45) என்பவர், தனது வீட்டில் மதுபானத்தை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கோதாவரியை போலீசார் கைது செய்தனர்.
News November 12, 2025
வேலூர் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் செய்யவும்.*
News November 11, 2025
வேலூர் குடிநீர் தர பரிசோதனை மையம் கலெக்டர் ஆய்வு

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (நவ.11) அண்ணா சாலையில் குடிநீர் தர பரிசோதனை மேற்கொள்ளும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் பற்குணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரேமலதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


