News March 12, 2025

சைபர் மோசடி கும்பல்களிடம் பிடிபட்ட 500 இந்தியர்கள் மீட்பு

image

மியான்மர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் சைபர் மோசடி கும்பல்களிடம் பிடிபட்டிருந்த 500 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். கடந்த திங்களன்று 283 பேரும், நேற்று 266 பேரும் இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். அதிக சம்பளத்தில் வேலை என்ற பொய் வாக்குறுதிகளை கூறி இந்தியர்கள் சிக்க வைக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News March 13, 2025

நிறைமாத நிலவே வா வா..

image

கே.எல்.ராகுலின் மனைவி அதியா ஷெட்டி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், அதை போட்டோஷூட் நடத்தி அவர்கள் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளனர். விதவிதமான போஸ்களில் பெற்றோர் ஆவதை அவர்கள் கொண்டாடியுள்ளனர். பிரபலங்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அடுத்த மாதம் இந்த தம்பதிக்கு முதல் குழந்தை பிறக்க உள்ளது. கடந்த 2023 ஜனவரியில் இவர்களுக்கு திருமணம் ஆனது.

News March 13, 2025

ரவி மோகன் இயக்கும் படத்தின் ஹீரோ யார் தெரியுமா?

image

நடிக்க ஒப்புக் கொண்ட படங்களை முடித்துவிட்டு, டைரக்‌ஷனில் கவனம் செலுத்த ரவி மோகன் முடிவு செய்துள்ளார். இதற்காக ஷூட்டிங் இடையே கிடைக்கும் நேரங்களில் திரைக்கதை எழுதி வருகிறார். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியுள்ள இக்கதையில் ஹீரோவாக யோகிபாபு நடிக்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டே தொடங்க உள்ளது. தனது டைரக்‌ஷன் கனவை பல பேட்டிகளில் அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

News March 12, 2025

நேருக்கு நேர் விவாதம்.. CMக்கு இபிஎஸ் சவால்

image

நீட், ஹைட்ரோகார்பன், டங்ஸ்டன் சுரங்கம், பிஎம் ஸ்ரீ என கொல்லைப்புறமாக துரோகம் செய்த DMKவிற்கு, ADMKவை பற்றி பேச அருகதை இல்லை என EPS சாடியுள்ளார். BJPயுடன் கூட்டணியில் இருந்தாலும் 7.5% இடஒதுக்கீடு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், காவிரி மேலாண்மை ஆணையம் என TNஐ காத்திட்ட இயக்கம் ADMK எனவும், தன்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க CMக்கு திராணி இருக்கிறதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!