News February 9, 2025
500க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்

மேல்மலையனூர் ஒன்றிய திமுக ஏற்பாட்டில் பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்த மகளிர்கள், இளைஞர்கள் என 500க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கள் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதில் மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் ப.சேகர், ஒன்றிய கழக செயலாளர்கள் நெடுஞ்செழியன், R. விஜயகுமார், நாராயண மூர்த்தி, சாந்தி சுப்பிரமணி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Similar News
News August 21, 2025
விழுப்புரத்தில் உள்ளவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் ஆகஸ்ட் 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை நடைபெறும். இதில், 8th, SSLC, 12th, ITI, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு இந்த <
News August 21, 2025
விழுப்புரம்: தாசில்தார், விஏஓ லஞ்சம் கேட்டால், இதை செய்யுங்க

மக்களே சாதி, வருவாய், குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையில் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று இருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (04146-259216) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.
News August 21, 2025
தரமான நெல் விதைகளை விநியோகிக்க அறிவுறுத்தல்

விழுப்புரத்தில் சம்பா பருவத்திற்கு தரமான சான்று பெற்ற நெல் விதைகளை விவசாயிகளுக்கு விநியோகிக்க விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்குனர் சரவணன் அறிவுறுத்தியுள்ளார். எனவே அனைத்து தனியார் மொத்த சில்லறை விதை விற்பனையாளர்கள் தரமான சான்று பெற்ற நெல் விதைகளை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு விநியோகிக்கவும், அதிகபட்ச விலைக்கு மிகாமல் விற்பனை செய்யவும் அறிவுறுத்தியுள்ளார். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.