News February 25, 2025
சிவராத்திரியில் 50 ஆண்டுகள் கழித்து.. 3 ராசிக்கு ஜாக்பாட்!

மகாசிவராத்திரி அன்று, 50 ஆண்டுகளுக்கு பிறகு சதுர்கிரக யோகம் (சூரியன், புதன், சந்திரன், சனி சேர்க்கை) நிகழ்கிறது *மிதுன ராசிக்கு வெளிநாட்டு யோகம் வரும். பணியில் மரியாதை கிடைக்கும். சுப காரியம் நிகழும் *துலாம் ராசிக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். ஆபீஸில் ஊதிய உயர்வு கிடைக்கும். ஆசைகள் நிறைவேறும் *மகர ராசிக்கு துக்கம் விலகும். பொருளாதாரத்தில் உயர்வு ஏற்படும். உறவில் நெருக்கம் அதிகரிக்கும்.
Similar News
News February 26, 2025
நாய்க்குட்டிக்காக கண்ணீர் விட்ட த்ரிஷா

நடிகை த்ரிஷா வளர்த்த ஸோரோ இரண்டு மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தது. இதனால், மனமுடைந்த அவர், பணிகளில் இருந்து சில காலம் ஓய்வு எடுத்துக் கொண்டார். இதனையடுத்து, ஸோரோவின் இரண்டாவது மாத நினைவு நாளுக்கு அவர் விளக்கேற்றி மரியாதை செய்தார். இதுகுறித்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், தற்போது அவருடன் இருக்கும் நாய்க்குட்டியான இஸ்ஸியை அனுப்பியதற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
News February 26, 2025
ராசி பலன்கள் (26.02.2025)

மேஷம் – பக்தி, ரிஷபம் – நன்மை, மிதுனம் – சிந்தனை, கடகம் – பரிசு, சிம்மம் – உற்சாகம், கன்னி – அனுகூலம், துலாம் – வெற்றி, விருச்சிகம் – உயர்வு, தனுசு – குழப்பம், மகரம் – நற்செய்தி, கும்பம் – உதவி, மீனம் – புகழ்.
News February 26, 2025
இந்த பள்ளிகளில் தெலுங்கு மொழிப்பாடம் கட்டாயம்

தெலங்கானாவில் CBSE, ICSE உள்ளிட்ட அனைத்து பாடத்திட்டங்களிலும் 9, 10ம் வகுப்புகளுக்கு தெலுங்கு மொழிப்பாடத்தைக் கட்டாயமாக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு, 1 – 8ம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயப் பாடமாக்கப்பட்டது. பிற தாய்மொழி மாணவர்களுக்கு எளிமையாக புரியும் வகையில் பாடம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. முந்தைய அரசு தெலுங்கை முழுமையாக அமல்படுத்தவில்லை என்று ஆளும் குற்றஞ்சாட்டியுள்ளது.