News August 24, 2024
UPS ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் (UPS) கீழ் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக 50%ஐ உறுதி செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. PM மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலனடைவார்கள் என அரசு தெரிவித்துள்ளது. ஊழியர்கள் NPS, UPS ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஓய்வூதிய திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம்.
Similar News
News January 10, 2026
இனி பள்ளிகளில் மாலை சிற்றுண்டி?

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மதிய சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாலை நேரத்தில் ஊட்டச்சத்து நிறைந்த சிற்றுண்டி வழங்க பொது சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து துறை, சமூக நலத்துறைக்கு பரிந்துரை செய்துள்ளது. இதில் வாழைப்பழம், சிறுதானியங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளதாம். ஒருவேளை செயல்படுத்தப்பட்டால் எந்தெந்த உணவுகளை சேர்க்கலாம்?
News January 10, 2026
விஜய்யின் பிரசார வாகனம் பறிமுதல்.. CBI சோதனை!

விஜய்யின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்த CBI அதிகாரிகள் கரூரில் உள்ள அலுவலகத்திற்கு கொண்டு சென்று பஸ்ஸில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், விஜய்யின் பிரசார பஸ் டிரைவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. நாளை மறுதினம் விஜய், டெல்லி அலுவலகத்தில் நேரில் ஆஜராக CBI அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ள நிலையில், இந்த சோதனையானது கவனத்தை பெற்றுள்ளது.
News January 10, 2026
மீண்டும் விஜய் – அஜித் மோதல்?

‘ஜனநாயகன்’ தொடர்பான வழக்கு விசாரணை ஜன.21-க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஜன.23-ல் அஜித்தின் ‘மங்காத்தா’ ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது. ஒருவேளை ஜனநாயகனுக்கு சர்டிபிகேட் கிளியர் ஆனால், அப்படமும் ஜன.23-ல் வெளியாக வாய்ப்புள்ளது. ஜன நாயகன் பிரச்னை தீர்ந்தால், வாரிசு – துணிவு படங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் – அஜித் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. மீண்டும் ஒரு Clash-க்கு ரெடியா?


