News August 24, 2024
UPS ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் (UPS) கீழ் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக 50%ஐ உறுதி செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. PM மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலனடைவார்கள் என அரசு தெரிவித்துள்ளது. ஊழியர்கள் NPS, UPS ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஓய்வூதிய திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம்.
Similar News
News August 26, 2025
சனாதன தர்மத்தை அழிக்க முடியாது: வானதி சீனிவாசன்

சனாதன தர்மத்தை எந்த அரசியல் தலைவர்களும் அழிக்க முடியாது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். ராமர் குறித்து வன்னி அரசு பேசியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர் முதலில் உண்மையான ராமாயணத்தை படிக்க வேண்டும் எனவும் வானதி பதிலடி கொடுத்துள்ளார். கட்டுக்கதைகளை வைத்து பேசுவது சரியானதல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
News August 26, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 439 ▶குறள்:
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.
▶ பொருள்: எந்தவொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும் தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈடுபடக் கூடாது.
News August 26, 2025
ராகுல் பெரும் பொய்யர்: தேவேந்திர பட்னாவிஸ்

வாக்கு திருடப்பட்டதாக ராகுல் காந்தி கூறும் பொய்களை மக்கள் நம்ப மாட்டார்கள் என மகாராஷ்டிரா CM தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். எவ்வித ஆதாரமும் இன்றி ராகுல் பெரும் பொய்யைகள் பேசி வருவதாகவும் அவர் சாடியுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், உண்மையான பொய்யர்கள் பாஜகவில்தான் இருப்பதாகவும், தேவேந்திர பட்னாவிஸ் திருட்டு அமைச்சர் எனவும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.