News August 24, 2024
UPS ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் (UPS) கீழ் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக 50%ஐ உறுதி செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. PM மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலனடைவார்கள் என அரசு தெரிவித்துள்ளது. ஊழியர்கள் NPS, UPS ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஓய்வூதிய திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம்.
Similar News
News December 4, 2025
₹1,000 மகளிர் உரிமைத்தொகை.. வந்தது HAPPY NEWS

டிச.12-ம் தேதி விடுபட்ட, தகுதி வாய்ந்த அனைத்து மகளிருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என DCM உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். விடுபட்டவர்களிடம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, இறுதி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், டிச.12-ல் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்வில், கூடுதல் பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை CM ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
News December 4, 2025
நெசவாளர்களுக்கு துரோகம் செய்த திமுக: EPS

நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை அழிக்க திமுக அரசு முயற்சிப்பதாக EPS கண்டனம் தெரிவித்துள்ளார். பொங்கலுக்கு வழங்கும் வேஷ்டி மற்றும் சேலைகள் 50% மேல் வெளிமாநிலத்தில் இருந்து வாங்கப்படுவதால், தமிழக நெசவாளர்கள் பாதிப்பை சந்திப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். திமுக செய்துள்ள துரோகத்திற்கு, கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் 2026 தேர்தலில் பதிலடி தருவார்கள் எனவும் எச்சரித்துள்ளார்.
News December 4, 2025
IQ என்றால் என்னனு தெரியுமா?

ஒருவரின் நுண்ணறிவுத்திறன் பற்றி பேசும்போது அடிக்கடி உச்சரிக்கப்படும் ஒரு வார்த்தை IQ (Intelligence Quotient). இது மூளை, புதிய விஷயங்களை எவ்வளவு விரைவாக கற்றுக்கொள்கிறது, சிக்கல்களை எப்படி தீர்க்கிறது, தர்க்கரீதியாக எப்படி சிந்திக்கிறது என்பதை அளவிடும் ஒரு அளவீடு ஆகும். ஒருவரின் சராசரி அளவீடு 100. அதற்கு மேல் இருந்தால் அவர் அதிக அறிவாற்றல் கொண்டவர் என அர்த்தம். உங்க IQ எவ்வளவுனு நினைக்கறீங்க?


