News March 31, 2025

சத்தீஸ்கரில் ஆயுதங்களுடன் 50 நக்சலைட்டுகள் சரண்

image

சத்தீஸ்கர் மாநிலம் பிஜபூரில் மனம் திருந்தி வாழ உள்ளதாக கூறி 50 நக்சல்ஸ் நேற்று சரணடைந்தனர். இதில் தேடப்படும் 14 முக்கிய நக்சலைட்டுகளும் அடக்கம். மொத்தமாக அவர்களின் தலைக்கு வெகுமதியாக ₹68 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆயுதங்களுடன் சரணடைந்தவர்களை வரவேற்பதாகவும், அவர்களின் மறுவாழ்வுக்கு தேவையான நடவடிக்கையை அரசு எடுக்கும் எனவும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.

Similar News

News January 19, 2026

₹3.25 லட்சம் கோடிக்கு ரபேல் விமானங்களை வாங்க முடிவு

image

பிரான்ஸிடம் இருந்து ₹3.25 லட்சம் கோடிக்கு 114 ரபேல் போர் விமானங்களை வாங்கும் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்புத் துறை கொள்கை ரீதியான ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது இந்திய விமானப்படையில் 36 ரபேல் விமானங்கள் உள்ளன. இந்த 114 விமானங்களில் 12-18 மட்டுமே வாங்கப்பட்டு, மீதமுள்ளவை இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். இதற்காக பிரான்சின் ஏவியேஷன் நிறுவனம் இந்தியாவுடன் இணைந்து உற்பத்தியை தொடங்கும்.

News January 19, 2026

திவ்யா பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?

image

பிக்பாஸ் தமிழ் 9-வது சீசனில், மகுடம் சூடிய திவ்யா கணேசனுக்கு டிராபி வழங்கப்பட்டது. முதலிடம் பிடித்ததற்காக அவருக்கு ரூ.50 லட்சம் மற்றும் மாருதி விக்டோரிஸ் கார் பரிசாக வழங்கப்பட்டது. இந்த சீசனில் இவருக்கு ஒரு நாளைக்கு ரூ.30 ஆயிரம் என மொத்தம் 77 நாட்களுக்கு ரூ.23 லட்சத்துக்கு மேல் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. 2-வதாக சபரி, 3-வதாக விக்கல் விக்ரம், 4-வதாக அரோரா ஆகியோர் இடம்பிடித்தனர்.

News January 19, 2026

ஜனவரி 19: வரலாற்றில் இன்று

image

*1966 – இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். *1983 – நாஜி போர்க் குற்றவாளி கிளவுஸ் பார்பி பொலிவியாவில் கைது செய்யப்பட்டார். *2006 – புளூட்டோவுக்கான முதலாவது நியூ ஹரைசன்ஸ் என்ற விண்ணுளவியை நாசா விண்ணுக்கு ஏவியது. * 1855 – ஜி.சுப்பிரமணிய ஐயர், தமிழக இதழியலாளர் பிறந்ததினம். *1990 – இந்திய மதகுரு ஓஷோ மரணம்.

error: Content is protected !!