News March 19, 2024

நாள் ஒன்றுக்கு 50 கோடி லிட்டர் தண்ணீர் பற்றாக்குறை

image

பெங்களூருவில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அங்கு நாளொன்றுக்கு சுமார் 50 கோடி லிட்டர் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். ‘நீர்நிலைகள் ஆக்கிரமிப்பால், 6,900 ஆழ்துளை கிணறுகள் வறண்டுவிட்டன. நாள் ஒன்றுக்கு 260 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில், காவிரி மூலம் 147 கோடி லிட்டர், ஆழ்துளை கிணறுகள் மூலம் 65 கோடி லிட்டர் தண்ணீரும் கிடைக்கிறது’ என்றார்

Similar News

News September 7, 2025

BREAKING: நாடு முழுவதும் விலை குறைகிறது

image

GST 2.0 எதிரொலியாக ஹுண்டாய் நிறுவனம், தங்களது கார்களின் விலையை ₹2.40 லட்சம் வரை குறைத்துள்ளது. முன்னதாக, ரெனால்ட், டொயோட்டா, மஹிந்திரா, மாருதி சுசூகி, டாடா மோட்டர்ஸ் நிறுவனங்கள் கார்களின் விலையை குறைத்தன. வரும் 22-ம் தேதி முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வர உள்ளது. ஹுண்டாய் நிறுவனம் குறைத்த கார் மாடல்களின் விலையை மேலே உள்ள போட்டோக்களை Swipe செய்து தெரிந்து கொள்ளவும்.

News September 7, 2025

Gpay, Phonepe-ல் வரம்பு ₹10 லட்சமாக அதிகரிப்பு

image

வரும் செப்.15 முதல், UPI பரிவர்த்தனைகளுக்கான (P2M) தினசரி வரம்பு ₹10 லட்சமாக உயர்த்தப்படுவதாக NPCI அறிவித்துள்ளது. தற்போது UPI மூலம் ஒரு நாளைக்கு ₹1 லட்சம் வரை தான் அனுப்ப முடியும். இதனால், இன்ஷூரன்ஸ், வரிகள், ஸ்டாக் முதலீடு, கிரெடிட் கார்டு கட்டணங்கள் செலுத்துவதில் சிரமம் உள்ளது. இதை போக்கும் வகையில் இனி ஒரு முறைக்கு அதிகபட்சம் ₹5 லட்சம், ஒரு நாளைக்கு ₹10 லட்சம் என வரம்பு உயர்த்தப்படுகிறது.

News September 7, 2025

மகளிர் உரிமை தொகை நிச்சயம்: உதயநிதி உறுதி

image

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் விண்ணப்பித்த தகுதியுள்ள மகளிருக்கு நிச்சயம் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என DCM உதயநிதி தெரிவித்துள்ளார். திருமண நிகழ்ச்சியில் பேசிய அவர், தற்போது 1.20 கோடி பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் நிலையில், அது மேலும் அதிரிக்கப்படும் என உறுதி அளித்தார். பின்னர் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு திருமண உதவித்தொகையை அவர் வழங்கினார்.

error: Content is protected !!