News October 18, 2025
50 கோடி கஸ்டமர்கள்.. ₹7,379 லாபம் ஈட்டிய ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நடப்பாண்டின் 3-வது காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், நாட்டில் ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 50 கோடியை தாண்டியுள்ளது தெரியவந்துள்ளது. அதேபோல், ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து கிடைக்கும் சராசரி வருவாய் (ARPU) மாதத்திற்கு ₹211.4-ஆகவும், ஜியோ பிளாட்ஃபார்ம்களின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 12.8% அதிகரித்து ₹7,379 கோடியாகவும் உள்ளது.
Similar News
News October 18, 2025
லாக்கர் சேவை: கட்டணத்தை குறைத்தது தேசிய வங்கி

பஞ்சாப் தேசிய வங்கி, லாக்கர் சேவைக்கான வாடகை கட்டணத்தை குறைத்துள்ளது. *.ஊரக பகுதிகள்: சிறிய லாக்கர் – ₹750 (முன்பு ₹1000), நடுத்தர லாக்கர் – ₹1,900 (முன்பு ₹2,500). *2-ம் தர நகரங்கள்: சிறிய லாக்கர் – ₹1,150 (முன்பு ₹1,500), நடுத்தர லாக்கர் – ₹2,250 (முன்பு ₹3,000). *மெட்ரோ நகரங்கள்: சிறிய லாக்கர் – ₹1,500 (முன்பு 2,000), நடுத்தர லாக்கர் – ₹3,000 (முன்பு 4,000).
News October 18, 2025
சாதிக்காக கொல்லாமல் சாதியை கொல்லுங்கள்: சீமான்

விரைவில் தேர்தல் நடக்க உள்ளதால்தான், ஆணவக் கொலைகள் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளதாக சீமான் விமர்சித்துள்ளார். சாதிக்காக கொலை செய்யாமல், சாதியை கொலை செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு அரசு நிவாரணம் கொடுத்ததாகவும், ஆனால், இடி தாக்கி உயிரிழந்த பெண்களின் குடும்பங்களுக்கு உதவ யாரும் முன்வரவில்லை என்றும் கூறியுள்ளார்.
News October 18, 2025
National Roundup: PM மோடியை சந்தித்த எகிப்து அமைச்சர்

*கடந்த 75 மணி நேரத்தில் 303 மாவோயிஸ்ட்கள் சரணடைந்துள்ளதாக PM மோடி அறிவிப்பு. *நிதி மோசடியில் ஈடுபட்ட மெகுல் சோக்ஷியை நாடு கடத்த பெல்ஜியம் அனுமதி.*ஜம்மு & காஷ்மிர் CM-ஆக உமர் அப்துல்லா ஒரு ஆண்டை நிறைவு செய்தார். *இந்தியா வந்துள்ள எகிப்து வெளியுறவு அமைச்சர் பத்தர் அப்தெலாட்டி PM மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை. *லடாக்கின் லே மாவட்டத்தில் பொதுவெளியில் மக்கள் கூட மீண்டும் கட்டுப்பாடு.