News November 14, 2024
50% பிராமணர்களிடம் செல்போன் இல்லை: SV சேகர்

பிராமணர்கள் மிகவும் ஏழ்மையான நிலையில் இருப்பதாக எஸ்.வி. சேகர் கூறியுள்ளார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில், “50% பிராமணர்கள் 500 ரூபாய் செல்போன் கூட இல்லாமல் இருக்கிறார்கள். பிணம் சுமக்கும் பிராமணர்கள் இருக்கிறார்கள். பிராமணர்களுக்கு 10% இடஒதுக்கீடு கொடுங்க. யாரும் பிராமின்னு சொல்ல வேண்டாம். அப்படி சொன்னால்தானே நாங்க NON BRAHMIN-னு சொல்வாங்க. ஐயர்னு சொல்லுங்க” என்றார்.
Similar News
News March 9, 2026
கில்லியில் விஜய்-த்ரிஷாவுக்கு பதில் இவர்களா?

விஜய் – த்ரிஷா முதன்முதலாக ஒன்றாக நடித்த படம் ’கில்லி’. இதில் இவர்களுக்கு பதில் வேறு இருவர் நடிக்கவிருந்ததாக கூறப்படுகிறது. இப்படத்துக்கான முதல் சாய்ஸாக விக்ரமும், ஜோதிகாவும்தான் இருந்தனராம். ஆனால், அந்த சமயத்தில் இருவருமே பிசியாக இருந்திருக்கின்றனர். இதனால் இருவராலும் கால்ஷீட் கொடுக்க முடியாமல் போனதால் இவர்களை விடுத்து விஜய்யையும் த்ரிஷாவையும் நடிக்க வைக்க டைரக்டர் தரணி முடிவெடுத்திருக்கிறார்.
News March 9, 2026
உங்கள் மகளுக்கு 21 வயதில் ₹60 லட்சம் கிடைக்கும் சூப்பர் திட்டம்

பெண் பிள்ளை வைத்திருப்போரின் பெரிய கவலையே எப்படி அவர்களின் எதிர்காலத்திற்காக சேமித்து வைப்பது என்பதுதான். மத்திய அரசின் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் சேர்ந்தால் மகளுக்கு 21 வயது ஆகும்போது அதிகபட்சமாக ₹69,27,578 லட்சம் கிடைக்கும். இதில் ₹250 – ₹1.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். உங்கள் குழந்தைக்கு 10 வயது முடிவதற்குள் அருகில் இருக்கும் வங்கியை அணுகி இத்திட்டத்தில் சேருங்கள். SHARE.
News March 9, 2026
4 வங்கிகளில் வட்டி உயர்வு.. மகிழ்ச்சி அறிவிப்பு

நடப்பு மார்ச் மாதத்தில் 4 வங்கிகள் வைப்பு நிதிகளுக்கான(Fixed Deposit) வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. HDFC வங்கி ₹3 கோடிக்கு உள்பட்ட 5 ஆண்டுகள் FD-க்கு 7.50% வரையும், YES பேங்க், பந்தன் ஆகிய வங்கிகள் 7.75% வரையும் வட்டியை உயர்த்தியுள்ளன. சூர்யோதய் சிறு நிதி வங்கி பொதுமக்களுக்கு 7.90%, மூத்த குடிமக்களுக்கு 8.10% ஆக உயர்த்தியுள்ளது. மார்ச் 6-ம் தேதி முதல் இந்த வட்டி உயர்வு அமலுக்கு வந்துள்ளது.


