News February 1, 2025

50% மானியத்தில் விதைகள் – விவசாயிகளுக்கு அறிவிப்பு 

image

ஆண்டிபட்டி ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலகத்தில் கோடை சாகுபடிக்கு ஏற்ற அதிக மகசூல் தரும் மேம்படுத்தப்பட்ட கம்பு, உளுந்து, குதிரைவாலி, பருத்தி விதைகள் போதுமான அளவு இருப்பில் உள்ளன. விவசாயிகள் இதனை 50 சதவீத மானிய விலையில் வாங்கி பயன்பெறலாம். தேவைப்படும் விவசாயிகள் தங்கள் நிலத்திற்கான ஆவணங்களை வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வழங்கி விதைகளை வாங்கி பயன்பெறலாம் என வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Similar News

News November 12, 2025

தேனியில் 20 பணியிடங்களுக்கு 6,324 விண்ணப்பங்கள்

image

தேனி: தமிழகத்தில் காலியாக உள்ள 1450 ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாநில அரசு கடந்த அக்.,ல் அறிவிப்பு வெளியிட்டது. இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் 20 ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்கள் நிரப்ப அறிவிக்கப்பட்டிருந்தது. இப்பணியிடங்களுக்கு 6324 பேர் விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு பணியிடத்திற்கு 316 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

News November 12, 2025

தேனி: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு!

image

தேனி மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதில வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. இங்கு <>கிளிக் செய்து<<>> Fill Enumeration Form -ஐ தேர்ந்தெடுத்து மொபைல் எண் (அ) வாக்காளர் எண் மூலம் நுழைந்து SIR படிவத்தை பூர்த்தி செய்து உங்க பெயரை வாக்காளர் பட்டியலில் சேருங்க. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 12, 2025

தேனி: மனைவியை துன்புறுத்திய கணவர் மீது வழக்கு

image

போடி அருகே சிலமலை பகுதியை சேர்ந்தவர் அருள்கனி (22). இவரது கணவர் காளிமுத்து (28). இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் காளிமுத்து தினமும் மது அருந்திவிட்டு, குடும்ப செலவிற்கு பணம் தராமல் மனைவி, குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இது குறித்து அருள்கனி அளித்த புகாரில் போடி அனைத்து மகளிர் போலீசார் காளிமுத்து மீது நேற்று (நவ.11) வழக்கு பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!