News October 10, 2024
50% மானியத்தில் நாட்டுக்கோழி குஞ்சுகள்: நெல்லை கலெக்டர்

நெல்லை மாவட்ட ஆட்சியர் நேற்று(அக்.,9) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழ்மை நிலையில் உள்ள, கணவனை இழந்த, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு நாட்டுக்கோழி குஞ்சுகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தகம், கால்நடை உதவி மருத்துவர் அணுகி விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News November 16, 2025
நெல்லை: ஓடும் ரயிலில் தவறி விழுந்து மீனவர் பலி

நெல்லை – வள்ளியூர் இடையே தளபதிசமுத்திரம் ரயில்வே தண்டவாளம் அருகே நேற்று முன்தினம் இளைஞர் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் உயிரிழந்தவர் குமரி சின்னமுட்டத்தை சேர்ந்த மீனவர் திருமேனி செல்வம் (27) என்பதும் குமரி ரயிலில் பயணித்த போது ரயிலில் இருந்து தவறிவிழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து இளைஞர் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நாகர்கோவில் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 16, 2025
நெல்லை: 1,429 காலியிடங்கள்.. உடனே APPLY

திருநெல்வேலி மக்களே, தமிழ்நாடு சுகாதாரத்துறையில் (TN MRB) காலியாக உள்ள Health Inspector Grade-II பணிகளுக்கு 1,429 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளியில் தமிழை ஒரு படமாக பயின்று தகுதியான படிப்பை முடித்தவர்கள் நவ. 16 (இன்று)-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் – ரூ.19,500. மேலும் விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <
News November 16, 2025
நெல்லை: போலீசாரை வெட்ட முயன்ற 2 பேர் கைது

நெல்லை, சுத்தமல்லி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சினேகாந்த் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதே ஊரை சேர்ந்த கருத்தப்பாண்டி (25), மாரிமுத்து (28)-ஐ மறித்த போது, அவர்கள் தப்ப முயன்றுள்ளனர். இவர்களை பிடிக்க முயற்சித்தபோது, அவர்கள் அரிவாளால் போலீசாரை வெட்ட முயன்றதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவத்தை அடுத்து போலீசார் நேற்று அவர்களை கைது செய்தனர்.


